கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கு இன்று முதல் மக்கள் சென்று வழிபட அனுமதி.

கொரோனா தொற்று விதிமுறைகள் காரணமாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் மக்களுக்கு அனுமதி இல்லை, என்று ஏற்கெனெவே அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் விதிமுறைகளை அரசு தளர்த்தியதை அடுத்து மயிலாப்பூர் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் இன்று காலை முதல் மக்களை அனுமதித்தனர்.

விடியற்காலையிலிருந்தே கோயில் முற்றங்களுக்குள் மக்கள் வலம் வரத் தொடங்கினர்.

மயிலாப்பூரின் மையப்பகுதியில் உள்ள கோலவிழியம்மன் கோவிலில், சமீபத்திய ஆண்டுகளில் கோவில் புதுப்பித்தலுக்குப் பிறகு, அழகாக காட்சியளிக்கிறது, பெரும்பாலும் இந்த சுற்றுப்புறத்தைச் சேர்ந்த பெண்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

உள்ளூர் தேவாலயங்கள் தினசரி புனித மாஸ் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் பல மாஸ்களுக்கு மக்களை அனுமதிக்க முடிவுசெய்துள்ளனர்.

மக்கள் புனித மாஸ்ஸில் கலந்துகொள்ளும்போதும், தேவாலயத்திற்குள் அமரும்போதும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்று திருச்சபையை சேர்ந்த பாதிரியார் ஒருவர் கூறினார்.

Verified by ExactMetrics