ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள தேனாம்பேட்டை தபால் நிலையத்தில் பொதுமக்களுக்கு இப்போது புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். இங்கு தற்போது மொபைல் ரீசார்ஜ், D.T.H ரீசார்ஜ், மின்சார கட்டணம், போன்ற வேலைகள் செய்து கொடுக்கின்றனர். இந்த மாதிரியான சேவைகள் முதலில் கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தலைமை தபால் அலுவலகத்தில் செயப்படுத்தப்பட்டது. இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் இரண்டாவதாக தேனாம்பேட்டை தபால் நிலையத்தில் இப்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தபால் நிலையம் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். தொலைபேசி எண்: 24992583
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…