மயிலாப்பூர் மெரினா கடற்கரை அருகே உள்ள டூமிங் குப்பத்தில் வருடாந்திர அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெகு விமர்சியாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த துவக்க விழாவில் மாதா கொடியை மீனவர்கள் மெரினா கடற்கரை தெற்குப்பகுதியிலிருந்து படகில் எடுத்து வந்து பாதிரியாரின் பிரார்த்தனைக்கு பின் டூமிங் குப்பதிலுள்ள சிறிய தேவாலயத்தின் கொடிக்கம்பத்தில் ஏற்றினர்.
படகு மூலம் கொடியை எடுத்துச் செல்லும் பாரம்பரியம் பழமையானது என்று இங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த விழா வருடாவருடம் ஆகஸ்ட் மாதத்தில் இங்கு நடைபெறுவது வழக்கம்.
நாகப்பட்டினத்தில் அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழாவானது ஆண்டுதோறும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவிற்கு இங்கு வசிக்கும் மக்கள் அதிகளவில் செல்வார்கள் என்பதால் டூமிங்குப்பத்தில் முன்கூட்டியே மாதா திருவிழா நடத்தப்படுகிறது.
டூமிங்குப்பத்தில் நடைபெறும் இந்த திருவிழா எட்டு நாட்கள் நடைபெறுகிறது. ஒவ்வொருநாள் மாலையும் சிறப்பு பிராத்தனைகள் நடைபெறும்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…