மயிலாப்பூர் மெரினா கடற்கரை அருகே உள்ள டூமிங் குப்பத்தில் வருடாந்திர அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெகு விமர்சியாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த துவக்க விழாவில் மாதா கொடியை மீனவர்கள் மெரினா கடற்கரை தெற்குப்பகுதியிலிருந்து படகில் எடுத்து வந்து பாதிரியாரின் பிரார்த்தனைக்கு பின் டூமிங் குப்பதிலுள்ள சிறிய தேவாலயத்தின் கொடிக்கம்பத்தில் ஏற்றினர்.
படகு மூலம் கொடியை எடுத்துச் செல்லும் பாரம்பரியம் பழமையானது என்று இங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த விழா வருடாவருடம் ஆகஸ்ட் மாதத்தில் இங்கு நடைபெறுவது வழக்கம்.
நாகப்பட்டினத்தில் அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழாவானது ஆண்டுதோறும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவிற்கு இங்கு வசிக்கும் மக்கள் அதிகளவில் செல்வார்கள் என்பதால் டூமிங்குப்பத்தில் முன்கூட்டியே மாதா திருவிழா நடத்தப்படுகிறது.
டூமிங்குப்பத்தில் நடைபெறும் இந்த திருவிழா எட்டு நாட்கள் நடைபெறுகிறது. ஒவ்வொருநாள் மாலையும் சிறப்பு பிராத்தனைகள் நடைபெறும்.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…