மயிலாப்பூர் மெரினா கடற்கரை அருகே உள்ள டூமிங் குப்பத்தில் வருடாந்திர அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெகு விமர்சியாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த துவக்க விழாவில் மாதா கொடியை மீனவர்கள் மெரினா கடற்கரை தெற்குப்பகுதியிலிருந்து படகில் எடுத்து வந்து பாதிரியாரின் பிரார்த்தனைக்கு பின் டூமிங் குப்பதிலுள்ள சிறிய தேவாலயத்தின் கொடிக்கம்பத்தில் ஏற்றினர்.
படகு மூலம் கொடியை எடுத்துச் செல்லும் பாரம்பரியம் பழமையானது என்று இங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த விழா வருடாவருடம் ஆகஸ்ட் மாதத்தில் இங்கு நடைபெறுவது வழக்கம்.
நாகப்பட்டினத்தில் அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழாவானது ஆண்டுதோறும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவிற்கு இங்கு வசிக்கும் மக்கள் அதிகளவில் செல்வார்கள் என்பதால் டூமிங்குப்பத்தில் முன்கூட்டியே மாதா திருவிழா நடத்தப்படுகிறது.
டூமிங்குப்பத்தில் நடைபெறும் இந்த திருவிழா எட்டு நாட்கள் நடைபெறுகிறது. ஒவ்வொருநாள் மாலையும் சிறப்பு பிராத்தனைகள் நடைபெறும்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…