Categories: சமூகம்

கிளினிக்குகளில் உள்ள கோவிட் பராமரிப்பு செவிலியர்களுக்கு தினமும் ஸ்னாக்ஸ்களை அனுப்பும் இந்த சிறிய குழுக்களுக்கு உங்கள் நன்கொடைகள் தேவை

அபிராமாபுரத்தைச் சேர்ந்த வசுமதி ரங்கராஜன் அவர் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள ஜி.சி.சி கிளினிக்கிற்குச் சென்றபின் தனது சொந்த வழியில் ஒரு சிறிய சேவையைத் தொடங்கினார் – அவர் ஸ்னாக்ஸ்களை வீட்டில் தயாரித்து கிளினிக்கில் உள்ள செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அனுப்பினார்.

பின்னர் இந்த முயற்சியில் அவருடன் அவரது குடும்பத்தினரும் இணைந்து சேவை செய்தனர். இந்த செய்தி மக்களிடையே பரவியது மற்றும் இன்னும் சில குழுக்கள் தங்கள் பகுதிகளிலும் இதே போன்ற சேவையை செய்யத் தொடங்கினர்.

இப்போது, ​​இந்த சேவை விரிவடைந்துள்ளது. சுமார் 12 ஜி.சி.சி கிளினிக்குகளின் ஊழியர்களுக்கு இந்த உணவு வழங்கும் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எங்கள் முதல் ஸ்பான்சர்கள் மூலம், நாங்கள் தினசரி அடிப்படையில், சுமார் 40 பொட்டலங்கள் காலை உணவுகள், சுமார் 275 மதிய உணவு பொட்டலங்கள் மற்றும் சுமார் 75 ஸ்னாக்ஸ் பொட்டலங்களை 12 ஜி.சி.சி நடத்தும் மையங்களுக்கு கடந்த ஒரு மாதமாக வழங்கிவருகிறோம் என்று வசுமதி கூறுகிறார்.

இன்னும் சில மாதங்களுக்கு இந்த சேவையை தொடர குழுக்களுக்கு அதிக ஸ்பான்சர்கள் தேவை என்று அவர் கூறுகிறார்.

நன்கொடையாளர்கள் தொடர்புக்கு :

– சி பி ராமசாமி சாலை, ஆர் கே நகர், மற்றும் சாந்தோமில் உள்ள பி.எச்.சிக்களுக்கு, மதிய உணவு வழங்குவதற்காக வசுமதி ரங்கராஜன் (9840015071) ஐ தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் தி.நகரில் ஜெரிகேர் மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுக்கு சிற்றுண்டி வழங்குவதற்காகவும் தொடர்புகொள்ளவும்.

– அடையார், கிண்டி மற்றும் ஆர்.ஏ.புரம் ஆகிய இடங்களில் உள்ள பி.எச்.சிகளுக்கு மதிய உணவை வழங்க வித்யா கிருஷ்ணாவை (9500002394) தொடர்பு கொள்ளவும்.

கே.பி.தாசன் சாலை மற்றும் மிர்சாஹிபேட்டையில் காலை உணவு / மதிய உணவிற்கு நிதியுதவி செய்ய சுதா ஸ்ரீதரன் (9884184140).

– காரப்பாக்கம், ஓ.எம்.ஆரில் மதிய உணவுக்கு சுகன்யா ரங்கராஜன் (9940052896) ஐ தொடர்பு கொள்ளவும்.

இந்த கோவிட் போர்வீரர்களுக்கு நல்ல தரமான மற்றும் போதுமான அளவு உணவை இந்த சேவையாளர்கள் வழங்குகிறார்கள் என்று வசுமதி கூறுகிறார்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

2 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

3 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

5 days ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago

சாந்தோம் மற்றும் மந்தைவெளிப்பாக்கத்தில் மூன்று தெருக்களுக்கு புதிய பெயர். எம்.எஸ். விஸ்வநாதன், சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் திருச்சி லோகநாதன் ஆகியோரின் பெயர்கள்

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள மூன்று தெருக்களுக்கு பிப்ரவரி 18 காலை முறைப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டது, மேலும் புதிய தெருக்களின்…

1 week ago

மயிலாப்பூர் கோயிலில் நடைபெற்ற மயானக் கொல்லை விழாவில் அதிகளவில் திரண்ட மக்கள்

மயானக் கொல்லை விழா வேத காலத்திற்கு முந்தைய திருவிழாவாகக் கூறப்படுகிறது, இது இன்னும் மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன்…

1 week ago