Categories: சமூகம்

கிளினிக்குகளில் உள்ள கோவிட் பராமரிப்பு செவிலியர்களுக்கு தினமும் ஸ்னாக்ஸ்களை அனுப்பும் இந்த சிறிய குழுக்களுக்கு உங்கள் நன்கொடைகள் தேவை

அபிராமாபுரத்தைச் சேர்ந்த வசுமதி ரங்கராஜன் அவர் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள ஜி.சி.சி கிளினிக்கிற்குச் சென்றபின் தனது சொந்த வழியில் ஒரு சிறிய சேவையைத் தொடங்கினார் – அவர் ஸ்னாக்ஸ்களை வீட்டில் தயாரித்து கிளினிக்கில் உள்ள செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அனுப்பினார்.

பின்னர் இந்த முயற்சியில் அவருடன் அவரது குடும்பத்தினரும் இணைந்து சேவை செய்தனர். இந்த செய்தி மக்களிடையே பரவியது மற்றும் இன்னும் சில குழுக்கள் தங்கள் பகுதிகளிலும் இதே போன்ற சேவையை செய்யத் தொடங்கினர்.

இப்போது, ​​இந்த சேவை விரிவடைந்துள்ளது. சுமார் 12 ஜி.சி.சி கிளினிக்குகளின் ஊழியர்களுக்கு இந்த உணவு வழங்கும் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எங்கள் முதல் ஸ்பான்சர்கள் மூலம், நாங்கள் தினசரி அடிப்படையில், சுமார் 40 பொட்டலங்கள் காலை உணவுகள், சுமார் 275 மதிய உணவு பொட்டலங்கள் மற்றும் சுமார் 75 ஸ்னாக்ஸ் பொட்டலங்களை 12 ஜி.சி.சி நடத்தும் மையங்களுக்கு கடந்த ஒரு மாதமாக வழங்கிவருகிறோம் என்று வசுமதி கூறுகிறார்.

இன்னும் சில மாதங்களுக்கு இந்த சேவையை தொடர குழுக்களுக்கு அதிக ஸ்பான்சர்கள் தேவை என்று அவர் கூறுகிறார்.

நன்கொடையாளர்கள் தொடர்புக்கு :

– சி பி ராமசாமி சாலை, ஆர் கே நகர், மற்றும் சாந்தோமில் உள்ள பி.எச்.சிக்களுக்கு, மதிய உணவு வழங்குவதற்காக வசுமதி ரங்கராஜன் (9840015071) ஐ தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் தி.நகரில் ஜெரிகேர் மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுக்கு சிற்றுண்டி வழங்குவதற்காகவும் தொடர்புகொள்ளவும்.

– அடையார், கிண்டி மற்றும் ஆர்.ஏ.புரம் ஆகிய இடங்களில் உள்ள பி.எச்.சிகளுக்கு மதிய உணவை வழங்க வித்யா கிருஷ்ணாவை (9500002394) தொடர்பு கொள்ளவும்.

கே.பி.தாசன் சாலை மற்றும் மிர்சாஹிபேட்டையில் காலை உணவு / மதிய உணவிற்கு நிதியுதவி செய்ய சுதா ஸ்ரீதரன் (9884184140).

– காரப்பாக்கம், ஓ.எம்.ஆரில் மதிய உணவுக்கு சுகன்யா ரங்கராஜன் (9940052896) ஐ தொடர்பு கொள்ளவும்.

இந்த கோவிட் போர்வீரர்களுக்கு நல்ல தரமான மற்றும் போதுமான அளவு உணவை இந்த சேவையாளர்கள் வழங்குகிறார்கள் என்று வசுமதி கூறுகிறார்.

admin

Recent Posts

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியா பூங்கா மீண்டும் திறப்பு. பார்வையாளர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி குழுக்கள் பார்வையிடலாம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…

4 days ago

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

3 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

3 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

3 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

1 month ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

1 month ago