செய்திகள்

இந்த சி.ஐ.டி. காலனி பேக்கரி மூடப்பட்டது. ஆனால் பத்மா நாய்க் இப்போது ஹோம் பேக்கராக வேலை செய்கிறார்.

மயிலாப்பூர் சி.ஐ.டி காலனியில் வசித்து வரும் பத்மா நாய்க் அவர் கணவர் ஸ்ரீநிவாச நாய்க்குடன் இணைந்து பத்மஸ்ரீ புட்ஸ் என்ற பெயரில் சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக பேக்கரி தொழிலை சி.ஐ.டி காலனியில் நடத்தி வருகிறார்.

சி.ஐ.டி காலனியில் இரண்டாவது குறுக்கு தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தில் தரைத்தளத்தில் நடத்தி வந்தனர். இந்த கடையில் கேக்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் கிடைக்கும்.

கொரோனா சூழ்நிலையில் தொழில் அவ்வளவாக நடக்காது என்பதாலும், இந்த தம்பதிகளுக்கு வயதாகிவிட்டது என்ற காணத்தினாலும் இந்த கடை சமீபத்தில் மூடப்பட்டது.

ஆனால் பத்மா நாய்க்கிற்கு நீண்ட பல வருடங்களாக இந்த பேக்கரி தொழிலில் ஆர்வம் என்பதால் இவர் தற்போது வீட்டிலேயே கேக்குக்குகளை செய்யும் ஹோம் பேக்கராக மாறியுள்ளார்.

தற்போது சில மாதங்களுக்கு பத்மா நாய்க் முட்டைபோடாத கேக்குகளையும் மற்றும் கிரீம் இல்லாத கேக்குகளை மட்டும் அவருடைய ரெகுலர் வாடிக்கையாளர்களுக்கு செய்து தருவதாக கணவர் ஸ்ரீநிவாச நாய்க் கூறுகிறார்.

மேலும் இந்த கேக்குகளை பெறுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்டர் செய்ய வேண்டும் என்றும், பின்னர் கேக் தயார் செய்த பின்னர் வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவிக்கப்படும் அதன்பின் வாடிக்கையாளர் கேக் ஆர்டரை பிக்கப் செய்யவேண்டும்.

முகவரி : பத்மஸ்ரீ புட்ஸ், நெ.4, இரண்டாவது குறுக்கு தெரு, சி.ஐ.டி. காலனி, மயிலாப்பூர்/ தொலைபேசி எண் : 2499 7567 / 9941404678.

admin

Recent Posts

பெண் குழந்தைகளை ஆதரிக்கும் சேமிப்புத் திட்டத்தை பிரபலப்படுத்த மயிலாப்பூர் தபால் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…

2 months ago

ஆர்.ஏ.புரம் கல்யாண மண்டபத்தில் 30 ஜோடிகளுக்கு ‘சுயமரியாதை கல்யாணம்’ நடத்திய தி.மு.க.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…

2 months ago

சென்னை மெட்ரோ: ஆர்.எச். சாலையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…

2 months ago

சிட்டி சென்டர் மாலில் பாட்டில் ஆர்ட் வேடிக்கை நிகழ்ச்சி. பிப்ரவரி 16 வரை.

மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…

2 months ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தெப்ப விழா; கோயில் குளத்திற்குள் பணிகள் தொடங்கியது.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…

2 months ago