செய்திகள்

இந்த கோடையில் தெரு நாய்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் பறவை இனங்களுக்கும் தண்ணீர் வைக்கிறீர்களா?

விலங்குகளை நேசிக்கும் மக்கள் இந்த கோடையில் ஒரு எளிய வேலைகளை செய்கின்றனர். நாய்கள், பூனைகள், காகங்கள் தாகத்தைத் தணிக்க தண்ணீர் பிடிக்கும் கிண்ணங்களை ஆங்காங்கே வைக்கிறார்கள்.

அத்தகைய ஆர்வலர்களில் ஒருவர் பிரபலமான கைவினைஞரான மந்தைவெளியைச் சேர்ந்த விஜயலட்சுமி ஆவார்.

புளூ கிராஸ் நிறுவனத்திடம் இருந்து சில தண்ணீர் கிண்ணங்களை வாங்கி மந்தைவெளி – மயிலாப்பூர் பகுதியில் ஐந்து இடங்களில் வைத்துள்ளார். ஒரு இடம் திருமயிலை எம்.ஆர்.டி.எஸ் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு அருகில் உள்ளது. அந்த மண்டலத்தில் பல தெரு நாய்கள் இருப்பதாக அவர் கூறுகிறார். இங்கு தண்ணீர் பாத்திரத்தை வைத்த பிறகு, நாய்கள் மட்டுமல்ல, தண்ணீர் குடிக்க ஆடுகளும் கூட வருவதாக தெரிவிக்கிறார்.

ஆனால் இந்த இடத்திற்கு அருகில் வசிப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது மதிய நேரத்திற்கு முன்பு கிண்ணத்தை நிரப்பினால் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று விஜயலட்சுமி கூறுகிறார்.

புளூ கிராஸில் இருந்து தான் வாங்கும் தண்ணீர் கிண்ணங்களை விரும்புபவர்களுக்கு கொடுத்து உதவ முடியும் என்றும் அவர் கூறுகிறார். ஒவ்வொரு கிண்ணமும் சுமார் ரூ.130 மற்றும் சுமார் 7 லிட்டர் கொள்ளளவுள்ள தண்ணீரை ஊற்றிவைக்கலாம்.

நீங்கள் விஜயலட்சுமியை 9841979307 என்ற எண்ணில் அழைக்கலாம்.

admin

Recent Posts

பெண் குழந்தைகளை ஆதரிக்கும் சேமிப்புத் திட்டத்தை பிரபலப்படுத்த மயிலாப்பூர் தபால் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…

1 month ago

ஆர்.ஏ.புரம் கல்யாண மண்டபத்தில் 30 ஜோடிகளுக்கு ‘சுயமரியாதை கல்யாணம்’ நடத்திய தி.மு.க.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…

2 months ago

சென்னை மெட்ரோ: ஆர்.எச். சாலையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…

2 months ago

சிட்டி சென்டர் மாலில் பாட்டில் ஆர்ட் வேடிக்கை நிகழ்ச்சி. பிப்ரவரி 16 வரை.

மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…

2 months ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தெப்ப விழா; கோயில் குளத்திற்குள் பணிகள் தொடங்கியது.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…

2 months ago