ஊரடங்கு நேரத்திற்கு முன் இரண்டு இளைஞர்கள் சேர்ந்து இந்த கொரோனா நேரத்தில் மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளியில் வசிக்கும் மக்களுக்கு ஒரு சேவையை தொடங்கினர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திகொண்ட மூத்த குடிமக்களுக்கும், லேசான கொரோனா அறிகுறி உள்ளோருக்கும் தேவையான மருந்துகள், உணவுகள் போன்றவற்றை அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களது வீட்டுக்கு விநியோகம் செய்வது. தற்போது இந்த சேவையின் தேவை அதிகரித்துள்ளதாக இந்த சேவையை செய்து வரும் ராகவேந்தர் தெரிவிக்கிறார். எனவே தேவை இருப்பவர்கள் எங்களது வாட்ஸ் அப் எண்ணுக்கு முதல் நாள் இரவே அவர்களது தேவையை குறிப்பிட்டு வாட்ஸ் அப் செய்தால் நாங்கள் அவர்களுக்கு சேவை அளிப்பது எளிதாக இருக்கும் என்று தெரிவிக்கிறார். அவரது வாட்ஸ் அப் எண்: 8610701344.
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…
மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…
தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…