மயிலாப்பூர் பகுதியில் இரவுநேர ரோந்துப்பணிக்கு மூன்று காவல்துறை அதிகாரிகள் நியமனம்.

மாநகர் முழுவதும் காவல் துறையினர் இரவு ரோந்துப்பணியை கண்டிப்புடன் செய்ய வேண்டும் என்று புதிய கமிஷனர் ஆணையிட்டுள்ளார். இதன் காரணமாக மயிலாப்பூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு இந்த இரவு நேர ரோந்து பணிக்கான கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. இரவு ரோந்துப்பணியின் முக்கிய நோக்கம் என்னவெனில் போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவரை கண்டுபிடிப்பது, திருட்டு சம்பவங்கள், குற்றச்சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பது போன்றவையாகும்.

மயிலாப்பூர் பகுதியில் காவல்துறை அதிகாரி விஜயலட்சுமி, இரவு 11 மணி முதல் 6 மணிவரை இரவு ரோந்து பணியை மேற்கொள்ளவுள்ளார். இவரது தொலைபேசி எண் : 9498174421.
மேலும் காவல் உதவி ஆணையர் நடராஜன் இரவு நேர போக்குவரத்து சம்பந்தமான பிரச்சனைகளை கையாள உள்ளார் இவரது தொலைபேசி எண் : 9444050423. இவர்கள் தவிர்த்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சன் இரவு நேர ரோந்து பணியை மேற்கொள்ளவுள்ளார் தொலைபேசி எண் : 9444755485 . பொதுமக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் நடந்தால் மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

admin

Recent Posts

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

4 days ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 month ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

1 month ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago