செவ்வாய்க்கிழமை மயிலாப்பூரில் பொழிந்த மழையின் தாக்கங்கள்?

முதலில் வடிகால் மோசமாக இருக்கும் வீதிகள் குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது, மழையளவு குறைந்தால் மட்டுமே மழைநீர் வெளியேறும். புகைப்படக் கலைஞர் மதன் குமார் இன்று காலை பாபநாசம் சிவன் சாலை மற்றும் கச்சேரி சாலையின் ஒரு பகுதியில் தண்ணீர் தேக்கமடைந்துள்ளதாக தெரிவித்தார். மந்தைவெளியில் உள்ள திருவேங்கடம் தெருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மழைநீர் தேங்கியுள்ளதாகவும், குடியிருப்பாளர்கள் வெள்ளநீரிலேயே நடந்து செல்வதாகவும் சி.எஸ் பாஸ்கர் தெரிவித்தார். மற்ற இடங்களில், மழை இல்லாமல் இருந்த சில நிமிடங்களில் தண்ணீர் வடிந்தது. சாலையோரங்களில் சில மரங்கள் முறிந்து விழுந்தன. ஆழ்வார்பேட்டை சி.வி.ராமன் சாலையில் உள்ள ராஜி முத்துகிருஷ்ணன், சில சந்தர்ப்பங்களில், மரங்கள் மின்சாரம் வழங்கும் கேபிள்கள் மீது விழுந்ததால் மின் விநியோகம் தடைபட்டது என்றும், பின்பு மரங்களை அகற்றிய பின்பே அந்த பகுதிகளில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கிறார். நிலையான மழையின் போது முறிந்து விழும் பெரும்பாலான மரங்கள், உள்ளூர் தட்பவெப்பநிலையில் சரியாக வளராத மரங்களும் மற்றும் புதிய நடைபாதைகள் அமைக்கப்படும்போது அல்லது சாலைகள் / வீதிகள் மறுவடிவமைப்பு செய்யப்படும்போது சிமெண்டால் மூடப்பட்ட மரங்களே. பிஸியான சாலைகள் மற்றும் தெருக்களில் விழுந்த மரங்களை அகற்றுவதற்கான அவசர அழைப்புகளுக்கு உள்ளூர் ஊழியர்கள் முன்னுரிமை கொடுத்து பதிலளிக்கின்றனர். மழையின் போது பெரிய அளவில் விபத்துகள் ஏற்படாவண்ணம் தடுப்பதற்காக சமீபத்திய நாட்களில் சில பகுதிகளில், சென்னை கார்ப்பரேஷன் ஊழியர்கள் அடர்ந்து வளர்ந்துள்ள மரங்களை வெட்டி அகற்றியது குறிப்பிடத்தக்கது. சூறாவளி காற்று மின் இணைப்புகள் மற்றும் கேபிள்களுக்கு சேதம் விளைவித்தால் மின்சாரம் அணைக்கப்படும்.

admin

Recent Posts

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

3 weeks ago

பாரதிய வித்யா பவனின் மார்கழி இசை விழா நவம்பர் 20ல் தொடங்குகிறது.

பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…

3 weeks ago

ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் நவம்பர் 23ல்.

மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…

3 weeks ago