கடந்த சில தினங்களில் மயிலாப்பூரில் இரண்டு குற்றசம்பவ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் வசிக்கும் வயதான வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பழைய நகைக்கு பதில் புதிய நகைகள் கொடுப்பதாக ஒரு நபர் அவரிடம் கூறி அவரை ஒரு வீட்டருகே அழைத்து சென்றுள்ளார். முதலில் அவரிடம் ஒரு மோதிரத்தை வாங்கிக்கொண்டு சென்றவர் பின்பு இன்னொரு மோதிரம் கொடுத்தால்தான் புதிய மோதிரத்தை கொடுப்பர் என்று கூறி இன்னொரு மோதிரத்தையும் வாங்கி சென்றுள்ளார். வெகு நேரமாகியும் நகையை வாங்கி சென்றவர் வரவில்லை. பின்னர் அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதாக அறிந்து தனது மகன் மூலம் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மற்றுமொரு சம்பவம், திருமணத்திற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்களை மந்தைவெளி பேருந்து முனையம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே தள்ளி விட்டு அவர்கள் கீழே விழுந்த நேரத்தில் ஒரு பெண்ணின் செயினை பறித்து சென்றுள்ளனர். ஒரு பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த வழக்கை பட்டினப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…