கடந்த சில தினங்களில் மயிலாப்பூரில் இரண்டு குற்றசம்பவ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் வசிக்கும் வயதான வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பழைய நகைக்கு பதில் புதிய நகைகள் கொடுப்பதாக ஒரு நபர் அவரிடம் கூறி அவரை ஒரு வீட்டருகே அழைத்து சென்றுள்ளார். முதலில் அவரிடம் ஒரு மோதிரத்தை வாங்கிக்கொண்டு சென்றவர் பின்பு இன்னொரு மோதிரம் கொடுத்தால்தான் புதிய மோதிரத்தை கொடுப்பர் என்று கூறி இன்னொரு மோதிரத்தையும் வாங்கி சென்றுள்ளார். வெகு நேரமாகியும் நகையை வாங்கி சென்றவர் வரவில்லை. பின்னர் அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதாக அறிந்து தனது மகன் மூலம் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மற்றுமொரு சம்பவம், திருமணத்திற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்களை மந்தைவெளி பேருந்து முனையம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே தள்ளி விட்டு அவர்கள் கீழே விழுந்த நேரத்தில் ஒரு பெண்ணின் செயினை பறித்து சென்றுள்ளனர். ஒரு பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த வழக்கை பட்டினப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…