கடந்த சில தினங்களில் மயிலாப்பூரில் இரண்டு குற்றசம்பவ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் வசிக்கும் வயதான வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பழைய நகைக்கு பதில் புதிய நகைகள் கொடுப்பதாக ஒரு நபர் அவரிடம் கூறி அவரை ஒரு வீட்டருகே அழைத்து சென்றுள்ளார். முதலில் அவரிடம் ஒரு மோதிரத்தை வாங்கிக்கொண்டு சென்றவர் பின்பு இன்னொரு மோதிரம் கொடுத்தால்தான் புதிய மோதிரத்தை கொடுப்பர் என்று கூறி இன்னொரு மோதிரத்தையும் வாங்கி சென்றுள்ளார். வெகு நேரமாகியும் நகையை வாங்கி சென்றவர் வரவில்லை. பின்னர் அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதாக அறிந்து தனது மகன் மூலம் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மற்றுமொரு சம்பவம், திருமணத்திற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்களை மந்தைவெளி பேருந்து முனையம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே தள்ளி விட்டு அவர்கள் கீழே விழுந்த நேரத்தில் ஒரு பெண்ணின் செயினை பறித்து சென்றுள்ளனர். ஒரு பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த வழக்கை பட்டினப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…