மயிலாப்பூரில் கடந்த சில தினங்களில் நடைபெற்ற இரண்டு குற்றச்சம்பவங்கள்

கடந்த சில தினங்களில் மயிலாப்பூரில் இரண்டு குற்றசம்பவ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் வசிக்கும் வயதான வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பழைய நகைக்கு பதில் புதிய நகைகள் கொடுப்பதாக ஒரு நபர் அவரிடம் கூறி அவரை ஒரு வீட்டருகே அழைத்து சென்றுள்ளார். முதலில் அவரிடம் ஒரு மோதிரத்தை வாங்கிக்கொண்டு சென்றவர் பின்பு இன்னொரு மோதிரம் கொடுத்தால்தான் புதிய மோதிரத்தை கொடுப்பர் என்று கூறி இன்னொரு மோதிரத்தையும் வாங்கி சென்றுள்ளார். வெகு நேரமாகியும் நகையை வாங்கி சென்றவர் வரவில்லை. பின்னர் அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதாக அறிந்து தனது மகன் மூலம் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மற்றுமொரு சம்பவம், திருமணத்திற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்களை மந்தைவெளி பேருந்து முனையம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே தள்ளி விட்டு அவர்கள் கீழே விழுந்த நேரத்தில் ஒரு பெண்ணின் செயினை பறித்து சென்றுள்ளனர். ஒரு பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த வழக்கை பட்டினப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

6 days ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

1 week ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

1 week ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

3 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

3 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

3 weeks ago