ஆழ்வார்பேட்டையில் உள்ள சமுதாயக் கல்லூரி மாணவர்கள் இருவர் பாரா மெடிக்கல் பாடத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்

மழைக்காலத்தில், ஆழ்வார்பேட்டையில் உள்ள பெரு நகர சென்னை மாநகராட்சியின் சமுதாயக் கல்லூரிக்கு நல்ல சூடான செய்தி கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு இங்கு வழங்கப்பட்ட தொழிற்கல்வியில் இது ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.

சமீபத்தில் ஐ.எம்.ஏ நடத்திய பாராமெடிக்கல் போர்டு தேர்வுகளில், ஆழ்வார்பேட்டையில் உள்ள சமுதாயக் கல்லூரியின் இரண்டு பாராமெடிக்கல் மாணவர்கள் (டிப்ளமோ இன் லேப் டெக்னீசியன் படிப்பில்) மாநிலத் தரவரிசைகளைப் பெற்றனர் – இந்தத் தேர்வில் தமிழகம் முழுவதும் தேர்வெழுதிய 750 மாணவர்களில் அவர்கள் 2வது மற்றும் 3வது இடத்தைப் பெற்றனர்.

பி.தேன்மொழி 2வது ரேங்கையும், எஸ்.திவ்யா 3வது ரேங்கையும் பெற்றனர். இந்த சமுதாயக் கல்லூரி ‘சிறந்த செயல்திறன்’ விருதையும் பெற்றது. ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையுடன் இணைந்து இந்தப் படிப்பு நடத்தப்படுகிறது.

மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, நவம்பர் மாத தொடக்கத்தில் மயிலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரியை நிர்வகித்து வரும் குழுவையும் மற்றும் இரு மாணவர்களையும் பாராட்டினார். நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சைன் பேடியும் கலந்து கொண்டார்.

இக்கல்லூரிக்கு ஐஎம்ஏ வழங்கும் ‘சிறந்த கல்வி நிறுவனம் விருது’ கிடைத்திருப்பது இது மூன்றாவது முறையாகும் என ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேப் டெக்னிசியன், சுகாதார உதவியாளர், டயாலிசிஸ் டெக்னிசியன், ரேடியோலஜி, ஆபரேஷன் தியேட்டர் டெக்னிசியன், போன்ற டிப்ளோமா படிப்புகளும் மற்றும் இரண்டு சான்றிதழ் படிப்புகளும் உள்ளன – ஸ்போக்கன் இங்கிலீஷ் மற்றும் டேலி படிப்புகளும் இங்கு நடத்தப்படுகின்றது.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது; குளத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மூன்று நாள் தைப்பூசத் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை (பிப்ரவரி 1) தொடங்கியது. கபாலீஸ்வரப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…

4 hours ago

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

6 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

2 weeks ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

2 weeks ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

3 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

4 weeks ago