ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து கிடந்ததற்கு என்ன காரணம்?

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. திங்கள்கிழமை, தொழிலாளர்கள் படகுகள் மற்றும் வலைகளைப் பயன்படுத்தி இறந்த மீன்கள் அனைத்தையும் அகற்றினர்.

இந்த நிகழ்வுக்கான காரணம் என்று இதை பற்றி அறிந்தவர்களால் தெளிவாகக் குறிப்பிடமுடியவில்லை.

இதுகுறித்து திங்கள்கிழமை நேரில் பார்வையிட்ட மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலு, கார்த்திகை தீபத்திற்காக குளத்தின் படியில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான விளக்குகளில் ஊற்றப்பட்ட எண்ணெய், மழை பெய்தவுடன் தண்ணீரில் கலந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் மழை பெய்ய துவங்குவதற்கு முன்னரே மாலை 5 மணி முதல் குளத்தின் தென்மேற்கு மூலையில் மீன்கள் செத்து மிதந்து காணப்பட்டதாக தன்னார்வலர்கள் கூறுகின்றனர். எம்எல்ஏவின் நிலைப்பாட்டை எதிர்த்து கருத்தை கூறுகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை உள்ளூர் மழைநீர் வடிகால்களில் இருந்து குளத்திற்குள் பாய்ந்த தண்ணீர் அழுக்காகவும், துர்நாற்றம் வீசுவதாக இருந்ததாகவும், இதனால் மீன்கள் இறந்திருக்கலாம் என்றும் மற்றவர்கள் கூறுகின்றனர்.

இன்னும் சிலர், மழைநீர் குளத்திற்கு சீராக வருவதால் தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு மாறுவதும் மீன்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

2 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

2 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

2 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

4 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

4 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

4 weeks ago