மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனி பெருவிழா மார்ச் மூன்றாவது வாரத்தில் நடைபெறவுள்ளது. கடந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக பங்குனிபெருவிழா நடைபெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கோவில் குருக்கள், வழக்கமாக கோவிலில் நடைபெறும் விழாக்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் நடைபெறவில்லை என்றால், விடுபட்ட பிரமோற்சவ விழாவை அடுத்து வரும் சரியான தேதியில் சரியான நேரத்தில் மீண்டும் நடத்தலாம் என்றும், எனவே வரவுள்ள தை, மாசி மாதங்களில் பிரமோற்சவ விழாக்களை நடத்தலாம். என்று கோவில் குருக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது பற்றி அரசு அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு கோவிலில் நடைபெற்ற நடராஜர் பிரமோற்சவம் கொரோனா ஊரடங்கு தளர்வின் காரணமாக அரசு அனுமதியளித்ததை அடுத்து கோவிலுக்கு வெளியேயும் மாடவீதிகளில் சாமி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.
எனவே தற்போது சூழ்நிலை ஓரளவு சரியாகி உள்ள நிலையில் விடுபட்ட பிரமோற்சவ விழாவை நடத்த அரசு அனுமதிக்குமா என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அவ்வாறு அனுமதி அளித்தால் இந்த வருடம் இரண்டு பிரமோற்சவ விழாக்கள் நடைபெறும்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…