மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனி பெருவிழா மார்ச் மூன்றாவது வாரத்தில் நடைபெறவுள்ளது. கடந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக பங்குனிபெருவிழா நடைபெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கோவில் குருக்கள், வழக்கமாக கோவிலில் நடைபெறும் விழாக்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் நடைபெறவில்லை என்றால், விடுபட்ட பிரமோற்சவ விழாவை அடுத்து வரும் சரியான தேதியில் சரியான நேரத்தில் மீண்டும் நடத்தலாம் என்றும், எனவே வரவுள்ள தை, மாசி மாதங்களில் பிரமோற்சவ விழாக்களை நடத்தலாம். என்று கோவில் குருக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது பற்றி அரசு அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு கோவிலில் நடைபெற்ற நடராஜர் பிரமோற்சவம் கொரோனா ஊரடங்கு தளர்வின் காரணமாக அரசு அனுமதியளித்ததை அடுத்து கோவிலுக்கு வெளியேயும் மாடவீதிகளில் சாமி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.
எனவே தற்போது சூழ்நிலை ஓரளவு சரியாகி உள்ள நிலையில் விடுபட்ட பிரமோற்சவ விழாவை நடத்த அரசு அனுமதிக்குமா என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அவ்வாறு அனுமதி அளித்தால் இந்த வருடம் இரண்டு பிரமோற்சவ விழாக்கள் நடைபெறும்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…