கடற்கரையில் உள்ள மக்களையும் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் வகையில் மெரினா லைட் ஹவுஸின் சுவர்களில் ஓவியம்.

மெரினாவில் உள்ள கலங்கரை விளக்க வளாகச் சுவர் எளிமையான, வண்ணமயமான ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையோரம் இருக்கும் மக்களையும் அவர்களின் வாழ்க்கையையும் ஓவியங்களாக இந்த சுவற்றில் வரைந்துள்ளனர்.

இந்த திட்டம் ‘கரம் கோர்போம் அறக்கட்டளை’ (KKF) என்ற தன்னார்வ அமைப்பின் திட்டமாகும், இது ‘பொது இடங்களை துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்த வேண்டும்’ என்ற செய்தியை ஊக்குவிக்கிறது.

கரம் கோர்போம் அறக்கட்டளையின் தலைவரான எஸ். ஷிவ்குமார் கூறுகையில், ”கடற்கரைக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால், கடற்கரையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் வெவ்வேறு கதாபாத்திரங்களை சித்தரிக்கும் ‘பீப்பிள் ஆன் பீச்’ தீம் நாங்கள் பயன்படுத்தினோம். இது இன்ஸ்டன்ட் ஹிட் ஆகிவிட்டது, கிட்டத்தட்ட அந்த வழியாக செல்லும் அனைத்து மக்களும் சிறிது நேரம் நின்று இந்த ஓவியங்களை ரசிக்கிறார்கள்.

“மிகவும் முக்கியமாக, உள்ளூர் மக்கள் சுவரில் தங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். சிலர் வந்து தங்களுடைய படம் அல்லது வர்த்தகத்தை சித்தரிக்க வேண்டும் என்று கூறுவதாக தெரிவிக்கின்றார்.

சில தொழில் வல்லுநர்கள் மற்றும் கரம் கோர்ப்போம் கலைஞர்களால் ஒரு வாரத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டம், சென்னை மாநகராட்சியின் ‘நமக்கு நாமே திட்டம்’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது.

மேலும் இந்தத் திட்டத்திற்கு ஜோஹோ கார்ப்பரேஷன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து நிதியளித்தன. லைட் ஹவுஸில் பணி நியமனம், KKF இன் மிகவும் திருப்திகரமான திட்டங்களில் ஒன்றாகும் என்றும், சுற்றியுள்ள அனைவரின் பாராட்டும் எங்கள் பணியைத் தொடர ஊக்குவிக்கிறது என்றும் ஷிவ்குமார் கூறுகிறார்.

கரம் கோர்போம் அமைப்பு, திறந்தவெளிகள், விளையாட்டு மைதானங்கள், சிவில் அமைப்பால் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வளாகங்களில் உள்ள பொது சுவர்களில் இந்த திட்டங்களை செயல்படுத்துகிறது. இது தனிப்பட்ட முறையில் கமிஷன் செய்யப்பட்ட திட்டங்களையும் மேற்கொள்கிறது.

மேலும் விவரங்களுக்கு – தொலைபேசி எண் : 098840 32182
http://www.karamkorpom.org/.

புகைப்படங்கள்: கரம் கோர்போம் அறக்கட்டளை

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

4 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

1 week ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

1 week ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

2 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

4 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago