ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் புத்தாண்டு மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு தரிசனத்திற்க்காக அதிகளவில் திரண்ட பக்தர்கள்.

தமிழ் புத்தாண்டின் முதல் நாளான பிரதோஷத்தை முன்னிட்டு கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை அபிஷேகத்தை காண ஏராளமானோர் குவிந்தனர்.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்திப்பாடல்களையும், ஸ்லோகங்களையும் கோவில் வளாகத்திற்குள் பாடி ஊர்வலமாக சென்றனர்.

கற்பகாம்பாளை தரிசனம் செய்ய மக்கள் நீண்ட வரிசையில் கிழக்கு ராஜகோபுரம் வரை காத்து நின்றனர்.

8ம் நாள் வசந்த உற்சவத்தின் ஒரு பகுதியாக இரவு 9 மணிக்கு மேல் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து நாதஸ்வர இசை, வேத ஓதுதல், ஓதுவர்களின் திருவாசகம், முக்த வீணை, மேளம் இசையுடன் வசந்த மண்டபத்தைச் சுற்றி ஊர்வலம் நடைபெற்றது.

செய்தி, புகைப்படம்: எஸ். பிரபு

Verified by ExactMetrics