உறவினர்களுக்கு இனிப்புகளை பார்சலில் அனுப்ப மயிலாப்பூர் தபால் நிலையத்தில் மக்கள் கூட்டம்.

மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள தபால் நிலையத்தில் உள்ள சிறப்பு பார்சல் முன்பதிவு கவுன்டர் இப்போது பிஸியாகவே காணப்படுகிறது. ஏனென்றால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இனிப்பு பொட்டலங்கள் மற்றும் புத்தகங்களை பார்சல் அனுப்பி வருகின்றனர்.

கடந்த மூன்று வாரங்களாக, அமெரிக்காவிற்கான முன்பதிவுகள் அதிகமாக இருந்ததாக தபால் துறை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது இந்தியாவிற்குள் இருக்கும் இடங்களுக்கான பார்சல் சேவைகள் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தீபாவளி சிறப்பு முன்பதிவு கவுண்டர் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் (ஞாயிற்றுக்கிழமை விடுமுறை).

நீங்கள் அனுப்ப உள்ள இனிப்பு வகைகளை பேக் செய்யும்படி தபால்துறை ஊழியரிடம் நீங்கள் கேட்கலாம். உங்கள் வீட்டிற்கு வந்து பார்சல்களை எடுத்துச் செல்ல தபால் ஊழியரை அழைக்கலாம் தொலைபேசி எண் : 94548 42115. இந்த சேவைகளுக்கு தனியே சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கப்படும்.

முன்னணி கடைகளும் இந்த வசதியைப் பயன்படுத்தி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருவதாக கூறுகின்றனர். கடந்த ஆண்டுகளில், நவராத்திரி கொலு பொம்மைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான முன்பதிவுகளை தபால் துறை சிறப்பாக கையாண்டது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

நந்தலாலா மருத்துவ அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம். மார்ச் 22.

நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…

22 hours ago

உள்ளூர் தபால் நிலையங்களில் ஸ்பீட் போஸ்ட் (Speed ​​Post) வழங்கும் புதிய சேவைகள். முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்தில் விநியோகம்.

ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…

2 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய மகா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…

3 days ago

2026 தேர்தல்: பொது இடங்களில் உள்ள அரசு சார்ந்த விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை மறைக்கும் பணியாளர்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…

4 days ago

தொல்காப்பியப் பூங்காவின் முகத்துவாரப் பகுதி வற்றி வருகிறதா?

தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…

5 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம்: மார்ச் 16

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்), திங்கட்கிழமை, மார்ச் 16 அன்று காலை 9 மணி முதல்…

1 week ago