மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள தபால் நிலையத்தில் உள்ள சிறப்பு பார்சல் முன்பதிவு கவுன்டர் இப்போது பிஸியாகவே காணப்படுகிறது. ஏனென்றால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இனிப்பு பொட்டலங்கள் மற்றும் புத்தகங்களை பார்சல் அனுப்பி வருகின்றனர்.
கடந்த மூன்று வாரங்களாக, அமெரிக்காவிற்கான முன்பதிவுகள் அதிகமாக இருந்ததாக தபால் துறை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது இந்தியாவிற்குள் இருக்கும் இடங்களுக்கான பார்சல் சேவைகள் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தீபாவளி சிறப்பு முன்பதிவு கவுண்டர் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் (ஞாயிற்றுக்கிழமை விடுமுறை).
நீங்கள் அனுப்ப உள்ள இனிப்பு வகைகளை பேக் செய்யும்படி தபால்துறை ஊழியரிடம் நீங்கள் கேட்கலாம். உங்கள் வீட்டிற்கு வந்து பார்சல்களை எடுத்துச் செல்ல தபால் ஊழியரை அழைக்கலாம் தொலைபேசி எண் : 94548 42115. இந்த சேவைகளுக்கு தனியே சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கப்படும்.
முன்னணி கடைகளும் இந்த வசதியைப் பயன்படுத்தி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருவதாக கூறுகின்றனர். கடந்த ஆண்டுகளில், நவராத்திரி கொலு பொம்மைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான முன்பதிவுகளை தபால் துறை சிறப்பாக கையாண்டது குறிப்பிடத்தக்கது.
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…