இந்த நேரத்தில் மக்கள் நிறைய பேர் கொரோனா தடுப்பூசி போட்டுவருகின்றனர். இதுபோன்று மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளதை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள கிளினிக்குகளில் பார்க்க முடிகிறது. சென்னை மாநகராட்சி தடுப்பூசி போடுவதை ஆழ்வார்பேட்டை சி.பி இராமசாமி சாலையில் உள்ள மாநகராட்சி கிளினிக்கில் நடத்தாமல், கிளினிக்கின் அருகே பீமன்ன கார்டன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடத்துகின்றனர். இங்கு தடுப்பூசி போட வரும் மக்களுக்கு சுமார் எட்டு மணியளவில் நூறு டோக்கன்கள் வழங்குவதாகவும் இந்த டோக்கன்கள் அரை மணிநேரத்திற்குள் தீர்ந்து விடுவதாகவும், அந்த அளவுக்கும் மக்கள் கூட்டம் வருவதாகவும் இங்கு பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் கூறுகின்றனர்.
தடுப்பூசியை காலை பத்துமணியளவில் போடத்தொடங்குகின்றனர். தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இங்கு போடப்படுகிறது. மக்கள் சென்னை கார்ப்பரேஷனின் வலைதளம் மூலமாகவும் தடுப்பூசி போட பதிவு செய்யலாம் என்றும், ஆனால் நிறைய மக்கள் காலையிலேயே நேரடியாக தடுப்பூசி போடும் மையத்திற்கு வந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர் என்று இங்கு பணியாற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…