இந்த நேரத்தில் மக்கள் நிறைய பேர் கொரோனா தடுப்பூசி போட்டுவருகின்றனர். இதுபோன்று மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளதை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள கிளினிக்குகளில் பார்க்க முடிகிறது. சென்னை மாநகராட்சி தடுப்பூசி போடுவதை ஆழ்வார்பேட்டை சி.பி இராமசாமி சாலையில் உள்ள மாநகராட்சி கிளினிக்கில் நடத்தாமல், கிளினிக்கின் அருகே பீமன்ன கார்டன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடத்துகின்றனர். இங்கு தடுப்பூசி போட வரும் மக்களுக்கு சுமார் எட்டு மணியளவில் நூறு டோக்கன்கள் வழங்குவதாகவும் இந்த டோக்கன்கள் அரை மணிநேரத்திற்குள் தீர்ந்து விடுவதாகவும், அந்த அளவுக்கும் மக்கள் கூட்டம் வருவதாகவும் இங்கு பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் கூறுகின்றனர்.
தடுப்பூசியை காலை பத்துமணியளவில் போடத்தொடங்குகின்றனர். தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இங்கு போடப்படுகிறது. மக்கள் சென்னை கார்ப்பரேஷனின் வலைதளம் மூலமாகவும் தடுப்பூசி போட பதிவு செய்யலாம் என்றும், ஆனால் நிறைய மக்கள் காலையிலேயே நேரடியாக தடுப்பூசி போடும் மையத்திற்கு வந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர் என்று இங்கு பணியாற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…