இந்த நேரத்தில் மக்கள் நிறைய பேர் கொரோனா தடுப்பூசி போட்டுவருகின்றனர். இதுபோன்று மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளதை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள கிளினிக்குகளில் பார்க்க முடிகிறது. சென்னை மாநகராட்சி தடுப்பூசி போடுவதை ஆழ்வார்பேட்டை சி.பி இராமசாமி சாலையில் உள்ள மாநகராட்சி கிளினிக்கில் நடத்தாமல், கிளினிக்கின் அருகே பீமன்ன கார்டன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடத்துகின்றனர். இங்கு தடுப்பூசி போட வரும் மக்களுக்கு சுமார் எட்டு மணியளவில் நூறு டோக்கன்கள் வழங்குவதாகவும் இந்த டோக்கன்கள் அரை மணிநேரத்திற்குள் தீர்ந்து விடுவதாகவும், அந்த அளவுக்கும் மக்கள் கூட்டம் வருவதாகவும் இங்கு பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் கூறுகின்றனர்.
தடுப்பூசியை காலை பத்துமணியளவில் போடத்தொடங்குகின்றனர். தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இங்கு போடப்படுகிறது. மக்கள் சென்னை கார்ப்பரேஷனின் வலைதளம் மூலமாகவும் தடுப்பூசி போட பதிவு செய்யலாம் என்றும், ஆனால் நிறைய மக்கள் காலையிலேயே நேரடியாக தடுப்பூசி போடும் மையத்திற்கு வந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர் என்று இங்கு பணியாற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…
லஸ் சர்க்கிளைச் சுற்றி தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்த வியாபாரிகள், மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயில் எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்குச்…
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…