நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் தயார்நிலையில் உள்ளது. நேற்று இரவு சில வாக்குச்சாவடிகளில் தடுப்புக்கட்டைகள் கட்டும் பணி நடைபெற்றுவந்தது. இன்று காலை மயிலாப்பூர் இராணி மெய்யம்மை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் சுமார் ஐம்பது நபர்கள் நாளை வாக்குச்சாவடியில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று விவாதித்தனர். மேலும் காலை பத்து மணியளவில் தேர்தல் நடத்தும் வாக்குச்சாவடி அதிகாரிகளும் வந்தனர். தேர்தலுக்கு தேவையான பொருட்களும் வந்து இறங்கியுள்ளது. இந்த வாக்குசாவடி மயிலாப்பூரில் ஒரு பெரிய வாக்குச்சாவடியாகும். இந்த முறை கோவிட் காரணமாக வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…