நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் தயார்நிலையில் உள்ளது. நேற்று இரவு சில வாக்குச்சாவடிகளில் தடுப்புக்கட்டைகள் கட்டும் பணி நடைபெற்றுவந்தது. இன்று காலை மயிலாப்பூர் இராணி மெய்யம்மை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் சுமார் ஐம்பது நபர்கள் நாளை வாக்குச்சாவடியில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று விவாதித்தனர். மேலும் காலை பத்து மணியளவில் தேர்தல் நடத்தும் வாக்குச்சாவடி அதிகாரிகளும் வந்தனர். தேர்தலுக்கு தேவையான பொருட்களும் வந்து இறங்கியுள்ளது. இந்த வாக்குசாவடி மயிலாப்பூரில் ஒரு பெரிய வாக்குச்சாவடியாகும். இந்த முறை கோவிட் காரணமாக வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…