சி.பி.ராமசாமி ஐயர் அறக்கட்டளை, தமிழ்நாட்டிலிருந்து ‘Unsung Heroes’ பற்றிய 203 கதைகளைப் பகிர்ந்து கொள்கிறது; இப்போது ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ராமசாமி ஐயர் அறக்கட்டளை, இந்தியாவின் 75 ஆண்டுகால வரலாற்றையும், அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளையும் கொண்டாடவும், நினைவுகூரவும் அசாதி கா அம்ரித் மஹோத்சவின்(AKAM) ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

இது தொடர்பாக, அறக்கட்டளையானது, தமிழ்நாட்டைச் சேர்ந்த Unsung Heroes-ன் 203 கதைகளை இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்திடம் முதலில் சமர்ப்பித்திருந்தது.

‘பின்னர், அமைச்சகம் கேட்டுக்கொண்டபடி, தமிழ்நாட்டிலிருந்து மேலும் 205Unsung Heroes-ன் கதைகளை அனுப்பினோம்’ என்கிறார் சி.பி.ராமசாமி ஐயர் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நந்திதா கிருஷ்ணா.

அமைச்சகம் 203 கதைகளின் முதல் தொகுப்பை https://cmsadmin.amritmahotsav.nic.in/unsung-heroes.html என்ற இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. கதைகளைப் பார்க்க, மாநிலம் – தமிழ்நாடு – மற்றும் மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இரண்டாவது தொகுதி இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

Verified by ExactMetrics