மந்தைவெளியில் உள்ள இந்த சென்னை உயர்நிலைப் பள்ளிக்கு மாணவர் சேர்க்கைக்கு பிரச்சாரம் செய்ய உங்கள் ஆதரவு தேவை

மந்தைவெளி கெனால் பாங்க் சாலையில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் இந்த திங்கட்கிழமை பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்ந்து விசாலாட்சி தோட்டம், வண்ணியம்பதி, ஜெத் நகர் போன்ற பகுதிகளில் நடைபயணமாக சென்று, பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த மாநகராட்சி பள்ளி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 105 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். மாணவர் சேர்க்கை வருடாவருடம் குறைந்து வருவதாகவும், இதற்கு முக்கிய காரணங்களாக குடிசை மாற்று வாரிய பகுதிகளில் வசித்து வந்த மக்களை வேறொரு பகுதிக்கு அரசு இடமாற்றம் செய்ததாலும் மற்றும் பழைய குடியிருப்பு பகுதிகளை இடித்து புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதால் இங்கு வசித்து வந்த குடும்பங்கள் வேறொரு பகுதிகளில் வசித்து வருவதால், மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக பள்ளியின் முதல்வர் பால்ராஜ் தெரிவிக்கிறார். இந்த பள்ளியில் ஆங்கிலவழி கல்வியும் தமிழ்வழி கல்வியும் உள்ளது. இப்பள்ளியில் ஆறு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது இப்பள்ளிக்கு மாணவர் சேர்க்கைக்காக ஆசிரியர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

மாணவர் சேர்க்கை சம்பந்தமான தகவல்களுக்கு பள்ளியின் முதல்வர் பால்ராஜை 7402133337 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 week ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

1 week ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

3 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

3 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

4 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

4 weeks ago