மந்தைவெளி கெனால் பாங்க் சாலையில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் இந்த திங்கட்கிழமை பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்ந்து விசாலாட்சி தோட்டம், வண்ணியம்பதி, ஜெத் நகர் போன்ற பகுதிகளில் நடைபயணமாக சென்று, பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த மாநகராட்சி பள்ளி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 105 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். மாணவர் சேர்க்கை வருடாவருடம் குறைந்து வருவதாகவும், இதற்கு முக்கிய காரணங்களாக குடிசை மாற்று வாரிய பகுதிகளில் வசித்து வந்த மக்களை வேறொரு பகுதிக்கு அரசு இடமாற்றம் செய்ததாலும் மற்றும் பழைய குடியிருப்பு பகுதிகளை இடித்து புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதால் இங்கு வசித்து வந்த குடும்பங்கள் வேறொரு பகுதிகளில் வசித்து வருவதால், மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக பள்ளியின் முதல்வர் பால்ராஜ் தெரிவிக்கிறார். இந்த பள்ளியில் ஆங்கிலவழி கல்வியும் தமிழ்வழி கல்வியும் உள்ளது. இப்பள்ளியில் ஆறு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது இப்பள்ளிக்கு மாணவர் சேர்க்கைக்காக ஆசிரியர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
மாணவர் சேர்க்கை சம்பந்தமான தகவல்களுக்கு பள்ளியின் முதல்வர் பால்ராஜை 7402133337 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…