சென்னை மெட்ரோ: நான்கு சமீபத்திய முன்னேற்றங்கள் – நிலங்களை மூடுவது, பொது இடங்களை கையகப்படுத்துதல்

மயிலாப்பூர் பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களின் பணிகள் மெதுவாக நடைபெற்றாலும், சரியான முறையில் நடைபெறுகிறது.

1. இராணி மேரி கல்லூரியின் தென்கிழக்கில் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. வரைபடங்களின் முதல் தொகுப்பின் மூலம், லைட் ஹவுஸ் நிலையத்தை சென்றடையும் ஒரு முனை இங்கே அமைந்திருக்கும்.

2. காந்தி சிலை பக்கத்தில் உள்ள மெரினாவின் புல்வெளிகள் மற்றும் நடைபாதைகளின் பெரிய பகுதிகள் முக்கிய பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளன.

3. மந்தைவெளி மாநகர போக்குவரத்து கழகம் அருகே சந்திப்பில் உள்ள பகுதிகளின் தடுப்புகள் மெதுவாக போடப்பட்டுவருகிறது. ஒரு தனியார் கோவிலின் நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சியால் கூட புறக்கணிக்கப்பட்ட ஒரு ஆக்கிரமிப்பு, கோவிலுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று மெட்ரோ அதிகாரிகளை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், பஸ் டெர்மினஸின் சில பகுதி முதற்கட்ட வேலைக்கு தேவைப்படும். ஆனால், ஆர்.கே.மட சாலை, பெட்ரோல் பங்கிற்கு அப்பால் அதிக இடம் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

4. ஜும்மா மஸ்ஜித் மசூதிக்கு எதிரே பரந்து விரிந்து கிடக்கும் போலீஸ் குடியிருப்பு உள்ளே ஒரு பெரிய அளவிலான நிலம் கையகப்படுத்தி வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது; இங்கிருந்த பெரிய மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டன.

admin

Recent Posts

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

10 hours ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 weeks ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 weeks ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

3 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 weeks ago