செப்டம்பரின் பிற்பகுதியில் மின்னல் தாக்கிய தேவாலயத்தின் ஸ்டீபிள்கள் சரிசெய்யப்பட்டது.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவர் லேடி ஆஃப் கைடன்ஸ் சர்ச்சின் நுழைவாயிலில் செப்டம்பர் 28ம் தேதி மதியம் சுமார் 3 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது அங்கிருந்த இருந்த ஸ்டீபிள்களை மின்னல் தாக்கியது.

ஸ்டீபிள்களின் சிறிய செங்கல் துண்டுகள் கீழே விழுந்தன. தேவாலயத்தின் மேல் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்ட சிலுவை கூட சேதமடைந்தது. எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அருட்தந்தை ஒய்.எப்.போஸ்கோ, இந்த தேவாலயத்தின் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஸ்டீபிள்களும், சிலுவையும் சீரமைக்கப்பட்டுள்ளன என்றும், மேலும் தேவாலய வளாகத்தில் இடிதாங்கியை விரைவில் பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

– கோப்பு புகைப்படம் தேவாலயத்தின் ஸ்டீபிள்களை காட்டுகிறது.

செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்

Verified by ExactMetrics