தமிழ்நாடு சட்டசபைக்கு வருகிற மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அதற்கான தேர்தல் பிரச்சாரங்களை ஏற்கனேவே சில அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. நமது மயிலாப்பூர் பகுதியில் அடையாரில் வசிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் அமெரிக்கா நாராயணன் என்கிற வி.நாராயணன் சைலண்டாக தன்னுடைய பிரச்சாரத்தை சாதாரணமாக தொடங்கியுள்ளார்.
இவர் மயிலாப்பூரில் ஆட்டோ ரிக்ஷா தொழிற்சங்க தலைவராக இருப்பதால் அவருடைய சங்கத்தில் உள்ள ஆட்டோ ரிக்ஷா உறுப்பினர்களின் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்களை சந்தித்தார். மேலும் இது பற்றி அவர்கூறும் போது இந்த தேர்தலில் கூட்டணியின் சார்பாக மயிலாப்பூர் தொகுதி காங்கிரசுக்கு கொடுக்க வாய்ப்புள்ளதால், தான் அந்த சீட்டை பெற விரும்புவதால் இந்த பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…