ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள எத்திராஜ் கல்யாண மண்டபத்தில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ வும், ஐ கேர் மல்டி ஸ்பெஷாலிட்டியும் சேர்ந்து கொரோனா நோயாளிகளுக்காக ‘கோவிட் கேர் சென்டர்’ என்ற மையத்தை தொடங்கவுள்ளனர். இங்கு சுமார் 50 படுக்கைகள் இருக்கும். லேசான கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. அடுத்த வாரம் இந்த மையம் செயல்பட தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுமார் பதினைந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள் தேவைப்படுகிறது, ஒரு ஆக்சிஜன் செறிவூட்டியின் விலை சுமார் 65,000 ரூபாய். ஐந்து செறிவூட்டிகளுக்கு ஐகேர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதவிசெய்கின்றனர். மீதமுள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்க நன்கொடைகள் தேவைப்படுகிறது.
நன்கொடைகள் அளிக்க விரும்புபவர்கள் ஐகேர் மல்டி ஸ்பெஷாலிட்டியின் மருத்துவர் கார்த்திக் ஸ்ரீதரை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் :99629 27833. மின்னஞ்சல் முகவரி : care@theicareclinic.com
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…