அப்பு தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போட குவிந்த மக்கள் கூட்டம்.

சாந்தோம் அப்பு தெருவில் உள்ள சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார மையத்தில் தினமும் தடுப்பூசி போட மக்கள் கூட்டம் காலை 8.30 மணி முதலே வருகின்றனர். தடுப்பூசி போட இன்று காலை சுமார் நூறு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டது.

இங்கு இரண்டு வகை தடுப்பூசிகளும் இருப்பில் உள்ளதாக இங்கு பணியாற்றும் செவிலியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சுகாதார மையம் கொஞ்சம் நெருக்கமான பகுதி என்பதால் மூத்த குடிமக்கள் கூட்டத்தில் நின்று தடுப்பூசி போடவேண்டியுள்ளது. இது அவர்களுக்கு சிரமமாக உள்ளது. ஆழ்வார்பேட்டை தவிர மற்ற சுகாதார மையங்களில் இதுபோன்று மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஆழ்வார்பேட்டை போன்று மற்ற இடங்களிலும் கூடுதல் கிளினிக்குகளை திறக்க மாநகராட்சி முன்வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Verified by ExactMetrics