சித்திரகுளம் பகுதியில் ஜனவரி 2ல், நடனம், இசை, கதாகாலக்ஷேபம் மற்றும் கோலாட்டம்: மார்கழி நிகழ்ச்சி

மயிலாப்பூரைச் சேர்ந்த பரதநாட்டிய ஆசிரியர் பத்மா ராகவன், சித்ரகுளத்தைச் சுற்றிலும் இந்த மார்கழியில், இசை மற்றும் நடனச் சுவையை ஆக்கப் பூர்வமாக வழங்க விரும்புகிறார்.

ஜனவரி 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை, பத்மாவின் மாணவர்கள் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலில் இருந்து சித்திரகுளம் பகுதிக்கு ஊர்வலமாகச் வரும்போது சில திருப்பாவை பாசுரங்களுக்கு நடனமாடுவார்கள்.

இந்த ஊர்வலத்தின் ஒரு பகுதியாக நடனக் கலைஞர் சசிரேகா பாலசுப்ரமணியன் கதாகாலக்ஷேபத்தை வழங்குகிறார்.

சில ஆண்களும் பெண்களும் கிருஷ்ணர் மற்றும் ஆண்டாள் போல் உடையணிந்து ஊர்வலத்தில் பங்கேற்பார்கள் (நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ பங்கேற்க விரும்பினால், நீங்கள் இந்த நிகழ்ச்சியில் சேரலாம்) என்று பத்மா கூறுகிறார்.

சிலம்பம் நடன அகாடமியை நடத்தி வரும், குரு சுதாராணி ரகுபதியின் சிஷ்யையான பத்மா, கோலாட்டம் ஆட சில பெண்களை அழைத்திருப்பதாக கூறுகிறார்.

நாள் : ஜனவரி 2, ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலில் இருந்து காலை 6.45 மணிக்கு மேல்.

இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கோப்பு புகைப்படம் கடந்த நிகழ்வில் பத்மா தனது நடனக் கலைஞர்களுடன் இருக்கும் புகைப்படம்.

Verified by ExactMetrics