தேர்தல் 2021

தேர்தல் 2021: அதிமுக, திமுக வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

மயிலாப்பூர் தொகுதியில் கடைசி வார தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் பிரச்சாரங்களை திட்டமிட்டு செய்து வருகின்றனர். திமுகவின் த.வேலுவும் மற்றும் அதிமுகவின் ஆர்.நடராஜும் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். நடராஜுக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்னவென்றால் அவர் பெயர் வேட்பாளராக கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டது. இவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போது நிறைய சமுதாய நிகழ்ச்சிகளில் (கச்சேரி, விளையாட்டு) கலந்து கொண்டுள்ளார். இதனால் இந்த பகுதிகளில் உள்ள மக்களின் ஆதரவு நடராஜுக்கு இருக்கும் என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். நேற்று முதல்வர் பழனிசாமி மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் நட்ராஜுக்கு ஆதரவாக மயிலாப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதேபோல திமுக வேட்பாளர் த.வேலுவுக்கு உள்ளூர் பகுதியிலும் மற்றும் குப்பம் பகுதிகளிலும் மக்களின் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கின்றனர். அந்த பகுதிகளில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அழ்வார்பேட்டை, அபிராமபுரம், ஆர்.ஏ.புரம் போன்ற பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு த.வேலுவை பற்றியும் அவர் மயிலாப்பூர் பகுதிக்கு ஏற்கனெவே செய்த வேலைகள் பற்றியும் அவ்வளவாக தெரியவில்லை.

மயிலாப்பூர் பகுதியில் போட்டியிடும் இரு வேட்பாளர்களும் மயிலாப்பூர் பகுதிக்கு அருகிலேயே வசிப்பதால் (த. வேலு மயிலாப்பூரிலும், நடராஜ் பெசன்ட் நகரிலும் வசிப்பதால்) வெற்றி பெரும் வேட்பாளரை மக்கள் சுலபமாக நேரில் சந்தித்து தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.

இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களின் ஓட்டு வங்கிகளில் மிடில் வகுப்பு மக்கள் மற்றும் உயர்ந்த வகுப்பில் இருக்கும் மக்களின் வாக்குகளே மயிலாப்பூர் பகுதியில் வெற்றிவாய்ப்பை தீர்மானிக்கும் என்று நம்பப்படுகிறது.

admin

Recent Posts

பெண் குழந்தைகளை ஆதரிக்கும் சேமிப்புத் திட்டத்தை பிரபலப்படுத்த மயிலாப்பூர் தபால் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…

1 month ago

ஆர்.ஏ.புரம் கல்யாண மண்டபத்தில் 30 ஜோடிகளுக்கு ‘சுயமரியாதை கல்யாணம்’ நடத்திய தி.மு.க.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…

2 months ago

சென்னை மெட்ரோ: ஆர்.எச். சாலையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…

2 months ago

சிட்டி சென்டர் மாலில் பாட்டில் ஆர்ட் வேடிக்கை நிகழ்ச்சி. பிப்ரவரி 16 வரை.

மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…

2 months ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தெப்ப விழா; கோயில் குளத்திற்குள் பணிகள் தொடங்கியது.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…

2 months ago