அ.தி.மு.க-வை சேர்ந்த மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு.நடராஜ் அவர்கள் மீண்டும் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட இன்று விண்ணப்பிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.கவின் கூட்டணி கட்சியான பா.ஜ.க-வை சேர்ந்த மடிப்பாக்கத்தில் வசித்து வரும் கரு. நாகராஜன் போட்டியிட விருப்பம் தெரிவித்து பா.ஜ.கவின் மூலம் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரியவருகிறது. நாகராஜன் கடந்த முறை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மயிலாப்பூரில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தை நாகராஜனே முன்னின்று நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அ.தி,மு.க வேட்பாளரா அல்லது பா.ஜ.க வேட்பாளரா என்பது நாளை தெரியவரும்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…