குடிசை பகுதிகள் மற்றும் குப்பம் பகுதிகள் போன்ற இடங்களில் பணிபுரியும் சென்னை மாநகராட்சியின் ஒப்பந்த ஊழியர்கள் மக்களை தடுப்பூசி போட பிரச்சாரம் செய்வது ரொம்ப கடினமாக உள்ளது என்று கூறுகின்றனர். சில மக்கள் காய்ச்சல் வரும் என்பதால் நாங்கள் தடுப்பூசி போட வரவில்லை என்றும், அதே நேரத்தில் உங்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு வலியுறுத்தினால் மாநகராட்சி பணம் தருகின்றனரா? போன்ற கேள்விகளை பொதுமக்கள் எழுப்புவதாகவும், இந்த பகுதிகளில் தடுப்பூசி போட வலியுறுத்துவது பெரும் சவாலாக உள்ளதாக ஒப்பந்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். தோராயமாக எடுத்துக்கொண்டால் பத்து வீடுகளில் சுமார் இரண்டு வீடுகளில் உள்ள தகுதி வாய்ந்தவர்களே இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்து பின்னர் உள்ளூர் பகுதிகளில் தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் இவ்வாறு செய்தால் மட்டுமே இந்த பகுதிகளில் அனைவருக்கும் தடுப்பூசி போடமுடியும் என்று கூறுகின்றனர்.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…