குடிசை பகுதிகள் மற்றும் குப்பம் பகுதிகள் போன்ற இடங்களில் பணிபுரியும் சென்னை மாநகராட்சியின் ஒப்பந்த ஊழியர்கள் மக்களை தடுப்பூசி போட பிரச்சாரம் செய்வது ரொம்ப கடினமாக உள்ளது என்று கூறுகின்றனர். சில மக்கள் காய்ச்சல் வரும் என்பதால் நாங்கள் தடுப்பூசி போட வரவில்லை என்றும், அதே நேரத்தில் உங்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு வலியுறுத்தினால் மாநகராட்சி பணம் தருகின்றனரா? போன்ற கேள்விகளை பொதுமக்கள் எழுப்புவதாகவும், இந்த பகுதிகளில் தடுப்பூசி போட வலியுறுத்துவது பெரும் சவாலாக உள்ளதாக ஒப்பந்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். தோராயமாக எடுத்துக்கொண்டால் பத்து வீடுகளில் சுமார் இரண்டு வீடுகளில் உள்ள தகுதி வாய்ந்தவர்களே இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்து பின்னர் உள்ளூர் பகுதிகளில் தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் இவ்வாறு செய்தால் மட்டுமே இந்த பகுதிகளில் அனைவருக்கும் தடுப்பூசி போடமுடியும் என்று கூறுகின்றனர்.
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…