அபிராமபுரத்தில் ஜூலை 31ம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 1மணி வரை இலவச தடுப்பூசி போடும் முகாம் நடைபெறுகிறது. மயிலாப்பூர் மந்தைவெளி ஆர்.ஏ. புரம், ஆழ்வார்பேட்டை பகுதி பொதுமக்கள் இந்த தடுப்பூசி முகாமில் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
இந்த தடுப்பூசி முகாமை காவேரி மருத்துவமனையும், ஆர் ஏ புரம் குடியிருப்பாளர்கள் நல சங்கமும்(RAPRA) இணைந்து நடத்துகிறது.
கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே வழங்கப்படவுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட விரும்புபவர்கள் இங்கு வந்து போட்டுக்கொள்ளலாம்.
இந்த முகாமில் முதல் டோஸ் தடுப்பூசி போட வருபவர்கள் தங்களுடைய ஆதார் கார்டையும், இரண்டாவது தடுப்பூசி போட வருபவர்கள் ஆதார்கார்டுடன் முதல் டோஸ் போட்டதற்கான சான்றிதழையும் எடுத்து வரவேண்டும்.
இந்த முகாமில் அனைத்து மக்களும் கலந்து கொள்ளலாம். முற்றிலும் இலவசம்.
முகாம் நடைபெறும் நாள் இடம்: ஜூலை 31, 2021. சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, செயின்ட் மேரிஸ் சாலை, அபிராமபுரம். (மாதா சர்ச் அருகில்)
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…