அபிராமபுரத்தில் ஜூலை 31ம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 1மணி வரை இலவச தடுப்பூசி போடும் முகாம் நடைபெறுகிறது. மயிலாப்பூர் மந்தைவெளி ஆர்.ஏ. புரம், ஆழ்வார்பேட்டை பகுதி பொதுமக்கள் இந்த தடுப்பூசி முகாமில் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
இந்த தடுப்பூசி முகாமை காவேரி மருத்துவமனையும், ஆர் ஏ புரம் குடியிருப்பாளர்கள் நல சங்கமும்(RAPRA) இணைந்து நடத்துகிறது.
கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே வழங்கப்படவுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட விரும்புபவர்கள் இங்கு வந்து போட்டுக்கொள்ளலாம்.
இந்த முகாமில் முதல் டோஸ் தடுப்பூசி போட வருபவர்கள் தங்களுடைய ஆதார் கார்டையும், இரண்டாவது தடுப்பூசி போட வருபவர்கள் ஆதார்கார்டுடன் முதல் டோஸ் போட்டதற்கான சான்றிதழையும் எடுத்து வரவேண்டும்.
இந்த முகாமில் அனைத்து மக்களும் கலந்து கொள்ளலாம். முற்றிலும் இலவசம்.
முகாம் நடைபெறும் நாள் இடம்: ஜூலை 31, 2021. சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, செயின்ட் மேரிஸ் சாலை, அபிராமபுரம். (மாதா சர்ச் அருகில்)
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…
தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…