அபிராமபுரத்தில் ஜூலை 31ம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 1மணி வரை இலவச தடுப்பூசி போடும் முகாம் நடைபெறுகிறது. மயிலாப்பூர் மந்தைவெளி ஆர்.ஏ. புரம், ஆழ்வார்பேட்டை பகுதி பொதுமக்கள் இந்த தடுப்பூசி முகாமில் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
இந்த தடுப்பூசி முகாமை காவேரி மருத்துவமனையும், ஆர் ஏ புரம் குடியிருப்பாளர்கள் நல சங்கமும்(RAPRA) இணைந்து நடத்துகிறது.
கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே வழங்கப்படவுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட விரும்புபவர்கள் இங்கு வந்து போட்டுக்கொள்ளலாம்.
இந்த முகாமில் முதல் டோஸ் தடுப்பூசி போட வருபவர்கள் தங்களுடைய ஆதார் கார்டையும், இரண்டாவது தடுப்பூசி போட வருபவர்கள் ஆதார்கார்டுடன் முதல் டோஸ் போட்டதற்கான சான்றிதழையும் எடுத்து வரவேண்டும்.
இந்த முகாமில் அனைத்து மக்களும் கலந்து கொள்ளலாம். முற்றிலும் இலவசம்.
முகாம் நடைபெறும் நாள் இடம்: ஜூலை 31, 2021. சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, செயின்ட் மேரிஸ் சாலை, அபிராமபுரம். (மாதா சர்ச் அருகில்)
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…
கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…