தினமும் பரபரப்பாக இயங்கும் காமராஜ் சாலையில் உள்ள சென்னை கார்பரேஷனின் 173வது வார்டு அலுவலகம்.

ஆர்.ஏ.புரம் அருகே காமராஜ் சாலையில் உள்ள சென்னை கார்பரேஷனின் வார்டு 173 வது அலுவலகம் தினமும் பரபரப்பாகவே இயங்குகிறது. இங்கிருந்துதான் பெரும்பாலான சுகாதார ஊழியர்கள் மயிலாப்பூரில் உள்ள முக்கியமான பகுதிகளுக்கு சென்று பணியாற்றுகிறார்கள். இங்கு சுமார் 110க்கும் மேற்பட்ட கோவிட் கேர் ஒப்பந்த பணியாளர்களும் உள்ளனர். இவர்களுக்கு தினமும் தர்மாம்பாள் பூங்காவில் அன்றைய வேலை சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெறும். பின்னர் இங்கிருந்து கிளம்பி அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று கோவிட் சம்பந்தமான உடல் வெப்ப பரிசோதனை, யாருக்காவது கோவிட் அறிகுறி உள்ளதா, மற்றும் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்புவது, தனிமைப்படுத்துதலில் இருப்பவர்களின் விவரங்களை சேமிப்பது போன்ற வேலைகளை செய்வார்கள்.

மேலும் இந்த அலுவலகத்திற்கு அருகிலேயே அம்மா கிளினிக்கும் உள்ளது. கோவிட் சூழ்நிலையால் இங்கு பொது மருத்துவம் தற்போது அவ்வளவாக பார்க்கப்படுவதில்லை. நீங்கள் இங்கு வந்து காலை 9.30 மணிக்குள் பரிசோதனை செய்யலாம். இங்கு பணியாற்றும் மருத்துவ குழு பத்துமணிக்கு மேல் வெளியில் உள்ள முகாம்களுக்கு அல்லது தடுப்பூசி போட சென்றுவிடுவார்கள். இது தவிர இந்த பகுதியில் சுமார் மூன்று ஆட்டோக்கள் உள்ளது. மக்கள் இந்த ஆட்டோக்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரிசோதனைக்கு சென்று வர பயன்படுத்துகின்றனர். மேலும் இங்கு ஒரு ஆம்புலென்ஸ் போன்ற வாகனம் உள்ளது. இந்த வாகனம் நோய்தொற்று அதிகமாக இருக்கும் நோயாளிகளை மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆகவே இந்த வார்டு 173ஐ சுற்றிலும் காலை முதல் மதியம் இரண்டு மணிவரை பரபரப்பாகவே காணப்படுகிறது.

admin

Recent Posts

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

18 hours ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 month ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

1 month ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago