தினமும் பரபரப்பாக இயங்கும் காமராஜ் சாலையில் உள்ள சென்னை கார்பரேஷனின் 173வது வார்டு அலுவலகம்.

ஆர்.ஏ.புரம் அருகே காமராஜ் சாலையில் உள்ள சென்னை கார்பரேஷனின் வார்டு 173 வது அலுவலகம் தினமும் பரபரப்பாகவே இயங்குகிறது. இங்கிருந்துதான் பெரும்பாலான சுகாதார ஊழியர்கள் மயிலாப்பூரில் உள்ள முக்கியமான பகுதிகளுக்கு சென்று பணியாற்றுகிறார்கள். இங்கு சுமார் 110க்கும் மேற்பட்ட கோவிட் கேர் ஒப்பந்த பணியாளர்களும் உள்ளனர். இவர்களுக்கு தினமும் தர்மாம்பாள் பூங்காவில் அன்றைய வேலை சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெறும். பின்னர் இங்கிருந்து கிளம்பி அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று கோவிட் சம்பந்தமான உடல் வெப்ப பரிசோதனை, யாருக்காவது கோவிட் அறிகுறி உள்ளதா, மற்றும் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்புவது, தனிமைப்படுத்துதலில் இருப்பவர்களின் விவரங்களை சேமிப்பது போன்ற வேலைகளை செய்வார்கள்.

மேலும் இந்த அலுவலகத்திற்கு அருகிலேயே அம்மா கிளினிக்கும் உள்ளது. கோவிட் சூழ்நிலையால் இங்கு பொது மருத்துவம் தற்போது அவ்வளவாக பார்க்கப்படுவதில்லை. நீங்கள் இங்கு வந்து காலை 9.30 மணிக்குள் பரிசோதனை செய்யலாம். இங்கு பணியாற்றும் மருத்துவ குழு பத்துமணிக்கு மேல் வெளியில் உள்ள முகாம்களுக்கு அல்லது தடுப்பூசி போட சென்றுவிடுவார்கள். இது தவிர இந்த பகுதியில் சுமார் மூன்று ஆட்டோக்கள் உள்ளது. மக்கள் இந்த ஆட்டோக்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரிசோதனைக்கு சென்று வர பயன்படுத்துகின்றனர். மேலும் இங்கு ஒரு ஆம்புலென்ஸ் போன்ற வாகனம் உள்ளது. இந்த வாகனம் நோய்தொற்று அதிகமாக இருக்கும் நோயாளிகளை மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆகவே இந்த வார்டு 173ஐ சுற்றிலும் காலை முதல் மதியம் இரண்டு மணிவரை பரபரப்பாகவே காணப்படுகிறது.

admin

Recent Posts

மயிலாப்பூரில் ஜூனியர்களுக்கான செஸ் போட்டி

64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…

7 hours ago

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் பழுதுபார்ப்புக்காக மூடப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…

7 hours ago

ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ உதிரிபாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல்.

மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…

8 hours ago

வில்லிவாக்கத்தில் குடும்பத்தினருடன் ‘காணாமல் போன நபர்’ மீண்டும் இணைந்தார்.

மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…

1 day ago

மயிலாப்பூர் ஆன்லைன் சமூகக் குழுக்களில் பகிரப்பட்ட ‘நபர் காணவில்லை’ என்ற செய்தி.

இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…

1 day ago

தொல்காப்பிய பூங்காவில், பணிகள் இன்னும் நடந்து வருவதால் விடுமுறை நாட்களில் வரும் கூட்டத்தை இழந்துள்ளது.

மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…

2 days ago