தினமும் பரபரப்பாக இயங்கும் காமராஜ் சாலையில் உள்ள சென்னை கார்பரேஷனின் 173வது வார்டு அலுவலகம்.

ஆர்.ஏ.புரம் அருகே காமராஜ் சாலையில் உள்ள சென்னை கார்பரேஷனின் வார்டு 173 வது அலுவலகம் தினமும் பரபரப்பாகவே இயங்குகிறது. இங்கிருந்துதான் பெரும்பாலான சுகாதார ஊழியர்கள் மயிலாப்பூரில் உள்ள முக்கியமான பகுதிகளுக்கு சென்று பணியாற்றுகிறார்கள். இங்கு சுமார் 110க்கும் மேற்பட்ட கோவிட் கேர் ஒப்பந்த பணியாளர்களும் உள்ளனர். இவர்களுக்கு தினமும் தர்மாம்பாள் பூங்காவில் அன்றைய வேலை சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெறும். பின்னர் இங்கிருந்து கிளம்பி அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று கோவிட் சம்பந்தமான உடல் வெப்ப பரிசோதனை, யாருக்காவது கோவிட் அறிகுறி உள்ளதா, மற்றும் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்புவது, தனிமைப்படுத்துதலில் இருப்பவர்களின் விவரங்களை சேமிப்பது போன்ற வேலைகளை செய்வார்கள்.

மேலும் இந்த அலுவலகத்திற்கு அருகிலேயே அம்மா கிளினிக்கும் உள்ளது. கோவிட் சூழ்நிலையால் இங்கு பொது மருத்துவம் தற்போது அவ்வளவாக பார்க்கப்படுவதில்லை. நீங்கள் இங்கு வந்து காலை 9.30 மணிக்குள் பரிசோதனை செய்யலாம். இங்கு பணியாற்றும் மருத்துவ குழு பத்துமணிக்கு மேல் வெளியில் உள்ள முகாம்களுக்கு அல்லது தடுப்பூசி போட சென்றுவிடுவார்கள். இது தவிர இந்த பகுதியில் சுமார் மூன்று ஆட்டோக்கள் உள்ளது. மக்கள் இந்த ஆட்டோக்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரிசோதனைக்கு சென்று வர பயன்படுத்துகின்றனர். மேலும் இங்கு ஒரு ஆம்புலென்ஸ் போன்ற வாகனம் உள்ளது. இந்த வாகனம் நோய்தொற்று அதிகமாக இருக்கும் நோயாளிகளை மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆகவே இந்த வார்டு 173ஐ சுற்றிலும் காலை முதல் மதியம் இரண்டு மணிவரை பரபரப்பாகவே காணப்படுகிறது.

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

6 days ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

7 days ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

1 week ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

3 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

3 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

3 weeks ago