மயிலாப்பூர் பகுதியில் சென்னை மாநகராட்சி நடத்திவரும் ஆரம்ப சுகாதர நிலையங்களில் கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டுமே கடந்த மூன்று நாட்களாக அனைத்து சுகாதார நிலையங்களிலும் இருப்பு இருந்துள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசி, ஆழ்வார்பேட்டை, சாந்தோம், ஆர்.ஏ.புரம் மற்றும் சாந்தோம் போன்ற பகுதிகளில் உள்ள மையங்களில் போதுமான அளவு இருப்பில் உள்ளது. கூட்டமும் இப்போது குறைவாகவே உள்ளது. காலையில் சென்றால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஆனால் கோவாக்சின் தடுப்பூசி எப்பொழுது வரும் என்று சுகாதார பணியாளர்களுக்கே தெரியவில்லை. ஆழ்வார்பேட்டை அருகே பீம்மண்ண கார்டன் தெருவில் மக்களின் வசதிக்காக சமீபத்தில் கூடுதலாக ஒரு தடுப்பூசி மையம் திறக்கப்பட்டது. ஆனால் அந்த மையத்தில் மக்கள் சென்று தடுப்பூசி போட ஆர்வம் காட்டாததால் இப்போது மூடப்பட்டுள்ளது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…