மயிலாப்பூர் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே மாநகராட்சியின் காய்கறி செடிகளை வளர்க்கும் பணி மீண்டும் தொடங்கியது.

சென்னை மாநகராட்சியின் துப்புரவு பணியை மேற்கொண்டுவரும் உர்பேசர் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர்கள் நான்கு இடங்களில் அவர்கள் சேகரிக்கும் காய்கறி கழிவுகளை சென்னை மாநகராட்சியின் ஊழியர்களிடம் கொடுக்கின்றனர். இந்த காய்கறி கழிவுகளிலிருந்து சென்னை மாநகராட்சி இயற்கை உரம் தயாரிக்கின்றது. இந்த உரம் தயாரிக்க நான்கு வாரம் முதல் சுமார் பன்னிரெண்டு வார காலங்கள் ஆகும்.

இது போன்ற இயற்கை உரம் தயாரிக்கும் ஒரு யூனிட் கச்சேரி சாலை பக்கிங் கெனால் அருகே பறக்கும் ரயில் தடத்தின் அடியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இங்கு எருவும் மண்ணும் கலந்து தக்காளி, வெண்டைக்காய். கீரை போன்றவற்றை வளர்த்து வந்தனர். பின்னர் கொரோனா காரணமாக இது கைவிடப்பட்டது. இப்போது திரும்பவும் கார்ப்பரேஷன் ஊழிர்களும் மற்றும் ஒப்பந்த ஊழியர்களும் சேர்ந்து காய்கறி செடிகளை வளர்க்க தொடங்கியுள்ளனர். ஆனால் போதிய தண்ணீர் வசதி இல்லை.

இந்த செய்தியை மயிலாப்பூர் எம்.எல்.ஏ அறிந்து இந்த பணியை செய்வதற்கு தேவையானவற்றை செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். மாநகரட்சியின் இந்த பணி பாராட்டுதலுக்குரியது.

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

6 days ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

1 week ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

1 week ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

3 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

3 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

3 weeks ago