மயிலாப்பூர் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் அவர்களது அன்றாட தேவையான காய்கறிகள் வாங்குவதை தெற்கு மாட வீதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் மேற்கொள்வர். தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய கடைகள் பகல் பன்னிரண்டு மணி வரை திறந்திருக்க அனுமதி அளித்துள்ளதால், பெரும்பாலான மக்கள் இயல்பான நாட்கள் போன்று காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். முகக்கவசங்கள் அணிந்திருந்தாலும் அதை சரியான முறையில் அணியவில்லை. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாலும் சிலர் தினமும் இங்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். கொரோனா தொற்று பரவி வரும் நேரத்தில் மக்கள் இதுபோன்று பொறுப்பில்லாமல் வெளியில் சுற்றுவது வேதனையளிப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். நீங்கள் கீழே பார்க்கும் படம் இன்று காலை தெற்கு மாட வீதியில் எடுக்கப்பட்டது.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…