மயிலாப்பூர் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் அவர்களது அன்றாட தேவையான காய்கறிகள் வாங்குவதை தெற்கு மாட வீதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் மேற்கொள்வர். தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய கடைகள் பகல் பன்னிரண்டு மணி வரை திறந்திருக்க அனுமதி அளித்துள்ளதால், பெரும்பாலான மக்கள் இயல்பான நாட்கள் போன்று காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். முகக்கவசங்கள் அணிந்திருந்தாலும் அதை சரியான முறையில் அணியவில்லை. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாலும் சிலர் தினமும் இங்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். கொரோனா தொற்று பரவி வரும் நேரத்தில் மக்கள் இதுபோன்று பொறுப்பில்லாமல் வெளியில் சுற்றுவது வேதனையளிப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். நீங்கள் கீழே பார்க்கும் படம் இன்று காலை தெற்கு மாட வீதியில் எடுக்கப்பட்டது.
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…
ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…
பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…
அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…