டாக்டர் ரங்கா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஹேமலதா வசிக்கிறார். கடந்த ஐந்து நாட்களாக கடைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும், இவரது வளாகத்தில் ஏற்கனேவே கட்டப்பட்ட பெரிய டேங்கில் இருந்து தண்ணீர் நீண்ட இரண்டு குழாய்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார்.
டாக்டர் ரங்கா சாலையில் நவம்பர் 7-ம் தேதி பெய்த மழையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, மேலும் இந்த பரபரப்பான சாலையை ஒட்டியுள்ள இரண்டு சந்துகள் வெள்ளத்தில் மூழ்கின. தற்போது குடிமராமத்து பணிகள் நடைபெற்று வரும் பாதை ஒன்றில் சில நாட்களாக சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
ஆனால், ஸ்ரீரங்கம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நான்கு குடும்பங்களைப் போல, இந்த சாலையில் வசிப்பவர்கள் சிலர், தரையில் இருந்து தண்ணீர் கசிந்து கொண்டிருப்பதை உணர்ந்தனர். மழைநீர் சேகரிப்பு கிணறுகளை மூழ்கடித்த வளாகங்களிலும் இது தெளிவாகக் காணப்பட்டது. இங்கு வசிக்கும் ஒருவர், இங்கே தரை மட்டத்திலிருந்து ஒரு அடி தூரத்தில் நீர்மட்டம் உள்ளது என்று கூறுகிறார்.
ஆனால், ஹேமலதா மற்றும் அவரது குடியிருப்பில் வசிப்பவர்கள் இந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். ஏனெனில் அவர்களின் நிலம் தாழ்வானது என்பதாலும், தண்ணீர் தானாகவே வெளியேறாததாலும், சுமார் 8/9 அடி ஆழமுள்ள தொட்டியிலிருந்து பம்பிங் செய்யும் போது தண்ணீர் குறையாமல் தொடர்ந்து வெளியேறிக்கொண்டிருப்பதை உணர்ந்தனர்.
இங்கே நீர் மட்டம் அதிகளவு உயர்ந்து உள்ளதாக ஹேமலதா கூறுகிறார்.
இன்று, புதன்கிழமை இரண்டு குழாய்கள் சாலையில் தண்ணீரை வெளியேற்றுவதைக் காண முடிந்தது, அது கிழக்கு நோக்கி பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது.
மேலும் எங்கள் குடியிருப்பில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எங்கள் மின் இணைப்புகள் அனைத்தும் தரைதளத்தில்தான் உள்ளது. என்கிறார் ஹேமலதா.
மழைநீர் சேகரிப்பு நிபுணர் சேகர் ராகவன் கூறுகையில், நகரின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் வெகுவாக உயர்ந்துள்ளது, பருவமழை தொடர்ந்து பொழிந்தால் நீர் கசிவை யாரும் தடுக்க முடியாது. ஜனவரியில் இருந்தே நீர் மட்டம் குறைய ஆரம்பிக்கும், என்று அவர் மேலும் கூறுகிறார்.
<< மழைக்குப் பிறகு, உங்கள் வளாகத்திலும் தண்ணீர் ஊற்றுபோல் வருகிறதா? எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்>>
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…