டாக்டர் ரங்கா சாலையில், சில இடங்களில் தொடர்ந்து வெளியேறி வரும் நிலத்தடி நீர்.

டாக்டர் ரங்கா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஹேமலதா வசிக்கிறார். கடந்த ஐந்து நாட்களாக கடைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும், இவரது வளாகத்தில் ஏற்கனேவே கட்டப்பட்ட பெரிய டேங்கில் இருந்து தண்ணீர் நீண்ட இரண்டு குழாய்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார்.

டாக்டர் ரங்கா சாலையில் நவம்பர் 7-ம் தேதி பெய்த மழையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, மேலும் இந்த பரபரப்பான சாலையை ஒட்டியுள்ள இரண்டு சந்துகள் வெள்ளத்தில் மூழ்கின. தற்போது குடிமராமத்து பணிகள் நடைபெற்று வரும் பாதை ஒன்றில் சில நாட்களாக சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

ஆனால், ஸ்ரீரங்கம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நான்கு குடும்பங்களைப் போல, இந்த சாலையில் வசிப்பவர்கள் சிலர், தரையில் இருந்து தண்ணீர் கசிந்து கொண்டிருப்பதை உணர்ந்தனர். மழைநீர் சேகரிப்பு கிணறுகளை மூழ்கடித்த வளாகங்களிலும் இது தெளிவாகக் காணப்பட்டது. இங்கு வசிக்கும் ஒருவர், இங்கே தரை மட்டத்திலிருந்து ஒரு அடி தூரத்தில் நீர்மட்டம் உள்ளது என்று கூறுகிறார்.

ஆனால், ஹேமலதா மற்றும் அவரது குடியிருப்பில் வசிப்பவர்கள் இந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். ஏனெனில் அவர்களின் நிலம் தாழ்வானது என்பதாலும், தண்ணீர் தானாகவே வெளியேறாததாலும், சுமார் 8/9 அடி ஆழமுள்ள தொட்டியிலிருந்து பம்பிங் செய்யும் போது தண்ணீர் குறையாமல் தொடர்ந்து வெளியேறிக்கொண்டிருப்பதை உணர்ந்தனர்.

இங்கே நீர் மட்டம் அதிகளவு உயர்ந்து உள்ளதாக ஹேமலதா கூறுகிறார்.

இன்று, புதன்கிழமை இரண்டு குழாய்கள் சாலையில் தண்ணீரை வெளியேற்றுவதைக் காண முடிந்தது, அது கிழக்கு நோக்கி பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது.

மேலும் எங்கள் குடியிருப்பில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எங்கள் மின் இணைப்புகள் அனைத்தும் தரைதளத்தில்தான் உள்ளது. என்கிறார் ஹேமலதா.

மழைநீர் சேகரிப்பு நிபுணர் சேகர் ராகவன் கூறுகையில், நகரின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் வெகுவாக உயர்ந்துள்ளது, பருவமழை தொடர்ந்து பொழிந்தால் நீர் கசிவை யாரும் தடுக்க முடியாது. ஜனவரியில் இருந்தே நீர் மட்டம் குறைய ஆரம்பிக்கும், என்று அவர் மேலும் கூறுகிறார்.

<< மழைக்குப் பிறகு, உங்கள் வளாகத்திலும் தண்ணீர் ஊற்றுபோல் வருகிறதா? எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்>>

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 days ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

3 days ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

3 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

3 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

3 weeks ago