மந்தைவெளி ஜெத் நகரில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் குப்பைகளை அகற்றும் நோக்கில் ஒரு வார காலத்திற்கு முகாம் நடத்தினர். இந்த முகாம் குப்பைகளை அகற்றும் அர்பேசர் சுமீத் நிறுவனத்துடன் சேர்ந்து நடத்தப்பட்டது. இந்த பகுதியில் இருக்கும் டாக்ஸி ஓட்டுநர் சங்கமும் இவர்களுடன் சேர்ந்து வீடு வீடாகச் சென்று சாலைகளில் குப்பைகளை போடவேண்டாம் என்றும், அதே நேரத்தில், தெருவோரம் இருக்கும் குப்பைத்தொட்டிகளில் குப்பை போடாமல் அர்பேசர் சுமீத் நிறுவனத்தின் ஊழியர்கள் வீட்டருகே வரும் போது அவர்களிடம் குப்பைகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டனர். மேலும் இந்த பகுதியில் இப்போது தெருவோரம் உள்ள குப்பை போடும் குப்பை தொட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வாகும்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…