கோவில்களில் மாசி மக ஊர்வலம் : பிப்ரவரி 16

கோவில் ஊர்வலங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வாரம் மாசி மகத்தை முன்னிட்டு ஊர்வலங்கள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பிப்ரவரி 16 அன்று நடைபெறவுள்ளது.

மாசிமகத்தன்று காலை மயிலாப்பூர் கோவில்களில் இருந்து சில ஊர்வலங்கள் புறப்படுகின்றன.

ஸ்ரீ தேசிகர் கோயிலின் ஸ்ரீநிவாசப் பெருமாள் மாசி மகத்தை முன்னிட்டு புதன்கிழமை காலை ‘சமுத்திர ஸ்நானம்’ செய்வதற்காக மெரினா கடற்கரைக்கு ஊர்வலமாகச் செல்வதாக தெரிகிறது.

காலை 5.30 மணிக்கு கோயிலில் இருந்து பல்லக்கு ஊர்வலம் தொடங்கும் என தெரிகிறது.

செய்தி : எஸ்.பிரபு

Verified by ExactMetrics