எம்.ஆர்.சி நகர் குடியிருப்பு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் எவ்வாறு நடத்தப்பட்டது.

நீங்களும் உங்கள் காலனி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தலாம். அதற்கு சில விதிமுறைகள் பின்பற்ற வேண்டியிருக்கும். இது போன்று கடந்த திங்கட்கிழமை எம் ஆர். சி நகரில் ஒரு முகாம் நடத்தப்பட்டது.

எம் ஆர். சி. நகர் பகுதியில் உள்ள ஜெயின் சாகரிகா என்ற நிறுவனம் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நூறு வீடுகளுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்தது. இவர்கள் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறையை தொடர்புகொண்டு அந்த பகுதியில் கடந்த மார்ச் 29ம் தேதி தடுப்பூசி முகாமை நடத்தினர். முகாம் நடத்துவதற்கு முன் சில வேலைகளை செய்தனர். மூத்தகுடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் குடியிருப்பு காவலாளி, வீட்டு வேலை செய்பவரகள், சமையல் வேலை செய்பவர்கள், அந்த பகுதியில் காய்கறி விற்பவர்கள் போன்றவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு அவர்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள ஒரு தனியார் உடற்பயிற்சி கூடத்தில் முகாம் நடத்த ஏற்பாடு செய்ததது. அங்கு சமூக இடைவெளியுடன் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது. மேற்கண்ட சிறப்பு ஏற்பட்டால் தடுப்பூசி போடுவதற்கு சென்னை மாநகராட்சியின் சுகாதார ஊழியர்களுக்கு சுலபமாக இருந்தது.

இதுபோன்று உங்கள் பகுதியில் சுமார் அறுபது எழுபது குடும்பங்களுக்கு தடுப்பூசி போட விரும்பினால் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறையை அணுகவும். மேலும் இதுசம்பந்தமான விவரங்களுக்கு எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரியா ராம்குமாரை தொடர்புகொள்ளவும். தொலைபேசி எண் : 9600047586

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

1 hour ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

1 day ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

3 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

5 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

7 days ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago