நீங்களும் உங்கள் காலனி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தலாம். அதற்கு சில விதிமுறைகள் பின்பற்ற வேண்டியிருக்கும். இது போன்று கடந்த திங்கட்கிழமை எம் ஆர். சி நகரில் ஒரு முகாம் நடத்தப்பட்டது.
எம் ஆர். சி. நகர் பகுதியில் உள்ள ஜெயின் சாகரிகா என்ற நிறுவனம் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நூறு வீடுகளுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்தது. இவர்கள் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறையை தொடர்புகொண்டு அந்த பகுதியில் கடந்த மார்ச் 29ம் தேதி தடுப்பூசி முகாமை நடத்தினர். முகாம் நடத்துவதற்கு முன் சில வேலைகளை செய்தனர். மூத்தகுடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் குடியிருப்பு காவலாளி, வீட்டு வேலை செய்பவரகள், சமையல் வேலை செய்பவர்கள், அந்த பகுதியில் காய்கறி விற்பவர்கள் போன்றவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு அவர்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள ஒரு தனியார் உடற்பயிற்சி கூடத்தில் முகாம் நடத்த ஏற்பாடு செய்ததது. அங்கு சமூக இடைவெளியுடன் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது. மேற்கண்ட சிறப்பு ஏற்பட்டால் தடுப்பூசி போடுவதற்கு சென்னை மாநகராட்சியின் சுகாதார ஊழியர்களுக்கு சுலபமாக இருந்தது.
இதுபோன்று உங்கள் பகுதியில் சுமார் அறுபது எழுபது குடும்பங்களுக்கு தடுப்பூசி போட விரும்பினால் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறையை அணுகவும். மேலும் இதுசம்பந்தமான விவரங்களுக்கு எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரியா ராம்குமாரை தொடர்புகொள்ளவும். தொலைபேசி எண் : 9600047586
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…