எம்.ஆர்.சி நகர் குடியிருப்பு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் எவ்வாறு நடத்தப்பட்டது.

நீங்களும் உங்கள் காலனி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தலாம். அதற்கு சில விதிமுறைகள் பின்பற்ற வேண்டியிருக்கும். இது போன்று கடந்த திங்கட்கிழமை எம் ஆர். சி நகரில் ஒரு முகாம் நடத்தப்பட்டது.

எம் ஆர். சி. நகர் பகுதியில் உள்ள ஜெயின் சாகரிகா என்ற நிறுவனம் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நூறு வீடுகளுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்தது. இவர்கள் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறையை தொடர்புகொண்டு அந்த பகுதியில் கடந்த மார்ச் 29ம் தேதி தடுப்பூசி முகாமை நடத்தினர். முகாம் நடத்துவதற்கு முன் சில வேலைகளை செய்தனர். மூத்தகுடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் குடியிருப்பு காவலாளி, வீட்டு வேலை செய்பவரகள், சமையல் வேலை செய்பவர்கள், அந்த பகுதியில் காய்கறி விற்பவர்கள் போன்றவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு அவர்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள ஒரு தனியார் உடற்பயிற்சி கூடத்தில் முகாம் நடத்த ஏற்பாடு செய்ததது. அங்கு சமூக இடைவெளியுடன் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது. மேற்கண்ட சிறப்பு ஏற்பட்டால் தடுப்பூசி போடுவதற்கு சென்னை மாநகராட்சியின் சுகாதார ஊழியர்களுக்கு சுலபமாக இருந்தது.

இதுபோன்று உங்கள் பகுதியில் சுமார் அறுபது எழுபது குடும்பங்களுக்கு தடுப்பூசி போட விரும்பினால் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறையை அணுகவும். மேலும் இதுசம்பந்தமான விவரங்களுக்கு எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரியா ராம்குமாரை தொடர்புகொள்ளவும். தொலைபேசி எண் : 9600047586

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

1 week ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 weeks ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 weeks ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 weeks ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

1 month ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

1 month ago