சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூத்த குடிமக்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய பயணச்சீட்டு வழங்கி வந்தனர். இந்த திட்டம் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் இலவசமாக பயணம் செய்ய பயணச்சீட்டுகளை மாநகர் முழுவதும் அனைத்து பேருந்து முனையங்களிலும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் மயிலாப்பூர் பகுதியில் மந்தைவெளி பேருந்து முனையத்தில் இலவச பயணச்சீட்டு வழங்கி வருகின்றனர். அறுபது வயது நிரம்பியவர்கள் இலவச பயணச்சீட்டு பெற தகுதியானவர்கள். இந்த இலவச பயணச்சீட்டின் மூலம் மாநகர பேருந்துகளில் மாதத்திற்கு பத்து முறை பயணம் செய்யலாம்.
ஆறு மாதத்திற்கு மொத்தமாகவும் இந்த இலவச பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் பேருந்து முனையத்திலேயே விண்ணப்பம் செய்யலாம். இன்று முதல் நாள் என்பதால் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…