சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூத்த குடிமக்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய பயணச்சீட்டு வழங்கி வந்தனர். இந்த திட்டம் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் இலவசமாக பயணம் செய்ய பயணச்சீட்டுகளை மாநகர் முழுவதும் அனைத்து பேருந்து முனையங்களிலும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் மயிலாப்பூர் பகுதியில் மந்தைவெளி பேருந்து முனையத்தில் இலவச பயணச்சீட்டு வழங்கி வருகின்றனர். அறுபது வயது நிரம்பியவர்கள் இலவச பயணச்சீட்டு பெற தகுதியானவர்கள். இந்த இலவச பயணச்சீட்டின் மூலம் மாநகர பேருந்துகளில் மாதத்திற்கு பத்து முறை பயணம் செய்யலாம்.
ஆறு மாதத்திற்கு மொத்தமாகவும் இந்த இலவச பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் பேருந்து முனையத்திலேயே விண்ணப்பம் செய்யலாம். இன்று முதல் நாள் என்பதால் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…