மூத்தகுடிமக்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய இலவச பயணச்சீட்டு வழங்கும் பணிகள் மீண்டும் தொடக்கம்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூத்த குடிமக்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய பயணச்சீட்டு வழங்கி வந்தனர். இந்த திட்டம் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் இலவசமாக பயணம் செய்ய பயணச்சீட்டுகளை மாநகர் முழுவதும் அனைத்து பேருந்து முனையங்களிலும் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் மயிலாப்பூர் பகுதியில் மந்தைவெளி பேருந்து முனையத்தில் இலவச பயணச்சீட்டு வழங்கி வருகின்றனர். அறுபது வயது நிரம்பியவர்கள் இலவச பயணச்சீட்டு பெற தகுதியானவர்கள். இந்த இலவச பயணச்சீட்டின் மூலம் மாநகர பேருந்துகளில் மாதத்திற்கு பத்து முறை பயணம் செய்யலாம்.

ஆறு மாதத்திற்கு மொத்தமாகவும் இந்த இலவச பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் பேருந்து முனையத்திலேயே விண்ணப்பம் செய்யலாம். இன்று முதல் நாள் என்பதால் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 weeks ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 weeks ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

4 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

4 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

1 month ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

1 month ago