மயிலாப்பூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது இரண்டு இடங்களில் தூய்மை பணியாளர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து கொடியேற்றினர்.
நாகேஸ்வர ராவ் பூங்கா அருகே உள்ள ரமா ராவ் காலனியில் வசிக்கும் மக்கள் கடந்த மூன்று வருடங்களாக அவர்கள் பகுதியில் தெரு தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் ஊழியர்களை அழைத்து கொடியேற்றி வருகின்றனர். இந்த வருடமும் அதே போன்று தூய்மை பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களையும் குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பு வேலைகளை செய்துவரும் செக்யூரிட்டிகளையும் அழைத்து கொடியேற்றினர். மேலும் இதே போன்று கல்லுக்காரன் தெருவிலும் இரண்டு உர்பேசர் ஊழியர்களை அழைத்து அவர்களுக்கு சால்வைகளை அணிவித்து கொடியேற்றவைத்தனர். இது போன்று தங்களை யாரும் அழைத்து இதுவரை கொடியேற்றவில்லை, இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, என்று தூய்மை பணிகளை மேற்கொள்ளும் உர்பேசர் ஊழியர்கள் தெரிவித்தனர்.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…