மயிலாப்பூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது இரண்டு இடங்களில் தூய்மை பணியாளர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து கொடியேற்றினர்.
நாகேஸ்வர ராவ் பூங்கா அருகே உள்ள ரமா ராவ் காலனியில் வசிக்கும் மக்கள் கடந்த மூன்று வருடங்களாக அவர்கள் பகுதியில் தெரு தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் ஊழியர்களை அழைத்து கொடியேற்றி வருகின்றனர். இந்த வருடமும் அதே போன்று தூய்மை பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களையும் குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பு வேலைகளை செய்துவரும் செக்யூரிட்டிகளையும் அழைத்து கொடியேற்றினர். மேலும் இதே போன்று கல்லுக்காரன் தெருவிலும் இரண்டு உர்பேசர் ஊழியர்களை அழைத்து அவர்களுக்கு சால்வைகளை அணிவித்து கொடியேற்றவைத்தனர். இது போன்று தங்களை யாரும் அழைத்து இதுவரை கொடியேற்றவில்லை, இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, என்று தூய்மை பணிகளை மேற்கொள்ளும் உர்பேசர் ஊழியர்கள் தெரிவித்தனர்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…