Categories: சமூகம்

அரசு நடத்தும் கிளினிக்குகளில் உள்ள ஊழியர்களுக்கு தினமும் மதிய உணவு, ஸ்னாக்ஸ்களை வழங்கும் மயிலாப்பூர் மக்கள்.

அபிராமபுரத்தில் வசிக்கும் வசுமதி ரங்கராஜன் என்பவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள சுகாதார மையத்திற்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்றுள்ளார். அங்கு பணியாற்றும் சுகாதார ஊழியர்களுகளின் சேவையை பார்த்து விட்டு அவர்களுக்கு ஏதாவது உதவி புரிய வேண்டும் என்று நினைத்து, மாலை ஸ்னாக்ஸ்களை வீட்டிலேயே தயாரித்து அவர்களுக்கு வழங்கியுள்ளார். இதை பார்த்த அவர்களது குடும்பத்தார் மதிய உணவை கொடுக்க விரும்பி மதிய உணவை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

இந்த செய்தியை அறிந்த அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர்களும் மயிலாப்பூரில் உள்ள மற்ற கிளினிக்குகளில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு மதிய உணவை ஏற்பாடு செய்து கொடுத்துவருகின்றனர். இந்த செய்தியை அறிந்த கிண்டி மற்றும் ஓ.எம்.ஆரில் வசிக்கும் மக்களும் அங்கு பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு உணவு மற்றும் ஸ்னாக்ஸ் வழங்கும் சேவையை செய்து வருகின்றனர். இது போன்று உங்கள் பகுதிகளில் யாராவது சேவை செய்து வந்தால் அவர்களை பற்றிய தகவல்களை எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள். மின்னஞ்சல் முகவரி mytimesedit@gmail.com

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

6 days ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

7 days ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

1 week ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

3 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

3 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

3 weeks ago