சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் இன்று காலை பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்த கிளினிக்குக்களுக்கு சென்றிருந்தனர். ஆனால் சுகாதார ஊழியர்கள் நாளை வருமாறு கூறி யாருக்கும் தடுப்பூசி செலுத்தவில்லை. ஏற்கனெவே சில இடங்களில் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. நேற்று முதல் மயிலாப்பூரில் தெரு முனை தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தெற்கு மாட வீதியில் கற்பகம் உணவகம் அருகே தடுப்பூசி முகாம் இன்று காலை பத்து மணியளவில் நடைபெற்றது.
மயிலாப்பூர் வியாபாரிகள் சங்கம் இந்த தடுப்பூசி முகாமை ஒருங்கிணைத்து நடத்தினர். இங்கு பெரும்பாலான வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். காலையில் இங்கு தடுப்பூசி போட வந்திருந்த பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர். அதேநேரத்தில் சுமார் பன்னிரண்டு மணிக்கு மேல் வந்த பதினெட்டு வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இங்கு சுமார் முந்நூறு டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்பட்டது. இன்று காலை முதல் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்குவது சம்பந்தமாக பெரும் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் திருப்பூரில் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். நாளை முதல் அனைத்து இடங்களிலும் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி எவ்வித குழப்பமும்மின்றி வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…