Categories: சமூகம்

அரசு நடத்தும் கிளினிக்குகளில் உள்ள ஊழியர்களுக்கு தினமும் மதிய உணவு, ஸ்னாக்ஸ்களை வழங்கும் மயிலாப்பூர் மக்கள்.

அபிராமபுரத்தில் வசிக்கும் வசுமதி ரங்கராஜன் என்பவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள சுகாதார மையத்திற்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்றுள்ளார். அங்கு பணியாற்றும் சுகாதார ஊழியர்களுகளின் சேவையை பார்த்து விட்டு அவர்களுக்கு ஏதாவது உதவி புரிய வேண்டும் என்று நினைத்து, மாலை ஸ்னாக்ஸ்களை வீட்டிலேயே தயாரித்து அவர்களுக்கு வழங்கியுள்ளார். இதை பார்த்த அவர்களது குடும்பத்தார் மதிய உணவை கொடுக்க விரும்பி மதிய உணவை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

இந்த செய்தியை அறிந்த அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர்களும் மயிலாப்பூரில் உள்ள மற்ற கிளினிக்குகளில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு மதிய உணவை ஏற்பாடு செய்து கொடுத்துவருகின்றனர். இந்த செய்தியை அறிந்த கிண்டி மற்றும் ஓ.எம்.ஆரில் வசிக்கும் மக்களும் அங்கு பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு உணவு மற்றும் ஸ்னாக்ஸ் வழங்கும் சேவையை செய்து வருகின்றனர். இது போன்று உங்கள் பகுதிகளில் யாராவது சேவை செய்து வந்தால் அவர்களை பற்றிய தகவல்களை எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள். மின்னஞ்சல் முகவரி mytimesedit@gmail.com

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

4 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago