அபிராமபுரத்தில் வசிக்கும் வசுமதி ரங்கராஜன் என்பவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள சுகாதார மையத்திற்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்றுள்ளார். அங்கு பணியாற்றும் சுகாதார ஊழியர்களுகளின் சேவையை பார்த்து விட்டு அவர்களுக்கு ஏதாவது உதவி புரிய வேண்டும் என்று நினைத்து, மாலை ஸ்னாக்ஸ்களை வீட்டிலேயே தயாரித்து அவர்களுக்கு வழங்கியுள்ளார். இதை பார்த்த அவர்களது குடும்பத்தார் மதிய உணவை கொடுக்க விரும்பி மதிய உணவை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
இந்த செய்தியை அறிந்த அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர்களும் மயிலாப்பூரில் உள்ள மற்ற கிளினிக்குகளில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு மதிய உணவை ஏற்பாடு செய்து கொடுத்துவருகின்றனர். இந்த செய்தியை அறிந்த கிண்டி மற்றும் ஓ.எம்.ஆரில் வசிக்கும் மக்களும் அங்கு பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு உணவு மற்றும் ஸ்னாக்ஸ் வழங்கும் சேவையை செய்து வருகின்றனர். இது போன்று உங்கள் பகுதிகளில் யாராவது சேவை செய்து வந்தால் அவர்களை பற்றிய தகவல்களை எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள். மின்னஞ்சல் முகவரி mytimesedit@gmail.com
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…