மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கோவிட் நோயாளிகளுக்குக்காக புதிய மருத்துவமனை திறப்பு

மயிலாப்பூர்  வடக்கு மாட வீதியிலுள்ள சரவணபவன் இருக்கும் கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் பி.எம் கோவிட் கேர் (B M Covid Care Centre) என்ற மருத்துவமனை நேற்று மாலை கோவிட் நோயாளிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது . இது நங்கநல்லூரிலுள்ள பி.எம் மருத்துவமனையின் ஒரு யூனிட் ஆகும். இந்த மருத்துவமனையில் இருபத்தைந்து படுக்கைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த மருத்துவமனையில் கோவிட் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாமல் தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களுக்கும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட லேசான அறிகுறிகள் இருப்பவர்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது. நோயாளிகள் தங்களுக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டதற்கான அறிக்கையை மருத்துவருக்கு சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவரின் ஆய்வுக்கு பின்னரே நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். மேலும் தொடர்புக்கு தொலைபேசி எண் : 95144 95111.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

3 days ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

4 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

4 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

4 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

5 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

1 week ago