மயிலாப்பூர் வடக்கு மாட வீதியிலுள்ள சரவணபவன் இருக்கும் கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் பி.எம் கோவிட் கேர் (B M Covid Care Centre) என்ற மருத்துவமனை நேற்று மாலை கோவிட் நோயாளிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது . இது நங்கநல்லூரிலுள்ள பி.எம் மருத்துவமனையின் ஒரு யூனிட் ஆகும். இந்த மருத்துவமனையில் இருபத்தைந்து படுக்கைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த மருத்துவமனையில் கோவிட் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாமல் தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களுக்கும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட லேசான அறிகுறிகள் இருப்பவர்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது. நோயாளிகள் தங்களுக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டதற்கான அறிக்கையை மருத்துவருக்கு சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவரின் ஆய்வுக்கு பின்னரே நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். மேலும் தொடர்புக்கு தொலைபேசி எண் : 95144 95111.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…