சாந்தோம் கதீட்ரலில் புதியதாக பொறுப்பேற்றுள்ள பாதிரியார் இந்த கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள பல குடும்பங்களுக்கு உதவ ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

சாந்தோம் புனித தோமையார் பேராலயத்தில் சமீபத்தில் புதிய பாதிரியாராக அருள்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் போரூர் பகுதியை சேர்ந்தவர். பாதிரியார் அருள்ராஜுக்கு தற்போது முக்கியமான சவால் என்னவெனில், இந்த பகுதியில் சுமார் ஐம்பது குடும்பங்களில் உள்ள முக்கியமாக வருமானம் ஈட்டக்கூடிய நபர்கள் கடந்த ஒரு வருடமாக வேலை இல்லாமல் இருந்துள்ளனர். இவர்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அதனால் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து தேவாலயத்தில் உதவி கேட்டுள்ளனர்.

பாதிரியார் கடந்த ஞாயிற்றுகிழமை நடத்தப்பட்ட பூசையின் போது அங்கு வந்திருந்த மக்களிடம், வசதிபடைத்தவர்கள் இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு குடும்பம் ஒரு குழந்தையின் கல்வி கட்டணத்தை செலுத்த உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனெவே ஐந்து முதல் ஏழு குடும்பங்கள் இதுபோன்று கஷ்ப்படுபவர்களுக்கு அவர்களின் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை ஏற்க முன் வந்துள்ளதாகவும், மேலும் இன்னும் பலர் வருவார்கள் என்றும் பாதிரியார் எதிர்பார்க்கிறார்.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

1 hour ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

1 day ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

3 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

5 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

7 days ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago