சாந்தோம் கதீட்ரலில் புதியதாக பொறுப்பேற்றுள்ள பாதிரியார் இந்த கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள பல குடும்பங்களுக்கு உதவ ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

சாந்தோம் புனித தோமையார் பேராலயத்தில் சமீபத்தில் புதிய பாதிரியாராக அருள்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் போரூர் பகுதியை சேர்ந்தவர். பாதிரியார் அருள்ராஜுக்கு தற்போது முக்கியமான சவால் என்னவெனில், இந்த பகுதியில் சுமார் ஐம்பது குடும்பங்களில் உள்ள முக்கியமாக வருமானம் ஈட்டக்கூடிய நபர்கள் கடந்த ஒரு வருடமாக வேலை இல்லாமல் இருந்துள்ளனர். இவர்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அதனால் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து தேவாலயத்தில் உதவி கேட்டுள்ளனர்.

பாதிரியார் கடந்த ஞாயிற்றுகிழமை நடத்தப்பட்ட பூசையின் போது அங்கு வந்திருந்த மக்களிடம், வசதிபடைத்தவர்கள் இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு குடும்பம் ஒரு குழந்தையின் கல்வி கட்டணத்தை செலுத்த உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனெவே ஐந்து முதல் ஏழு குடும்பங்கள் இதுபோன்று கஷ்ப்படுபவர்களுக்கு அவர்களின் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை ஏற்க முன் வந்துள்ளதாகவும், மேலும் இன்னும் பலர் வருவார்கள் என்றும் பாதிரியார் எதிர்பார்க்கிறார்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

12 hours ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

21 hours ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

2 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

3 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

5 days ago