தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வன்னியம்பதி பகுதியில் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதியதாக குடியிருப்புகளை கட்டும் பணியை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இந்த வன்னியம்பதி பகுதி, மந்தைவெளி வெங்கடகிருஷ்ணா சாலை அருகே உள்ளது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் தற்போது மூன்று பிளாக்குகள் கட்ட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பிளாக் 1 – ல் 111 தொகுதிகளும், பிளாக் 2 – ல் 1, 192 தொகுதிகளும் பிளாக் 3 ல் 192 தொகுதிகளும் கட்டப்படவிருக்கிறது.
இங்கு வசித்த மக்கள் இருப்பிடத்தை காலி செய்வதற்கு முன்னர் வீடு ஒதுக்கீடு செய்வதற்கு தேவையான ஆவணங்களை குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டனர். இது தவிர இந்த பகுதியில் அனுமதியில்லாமல் இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி குடியிருந்த மக்களுக்கும் வீடுகளை வழங்கவுள்ளதாக குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…
மயிலாப்பூர், ஆர் ஆர் சபாவில் மே 30, இன்று வெள்ளிக்கிழமை, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற தமிழ் திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த…
பி.எஸ். உயர்நிலைப் பள்ளி (வடக்கு) 1977 பேட்ச் எஸ்.எஸ்.எல்.சி (11 'ஏ' பிரிவு) 'பழைய மாணவர்கள்' சமீபத்தில் மயிலாப்பூரில் உள்ள…
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5 அன்று நடைபெறும் ‘மயிலையை மறுசுழற்சி செய்தல் - 21 நாள் சவால்’…
ராணி மேரி கல்லூரி வளாகத்தில் இப்போது ஒரு புதிய விடுதி துவங்கப்பட்டுள்ளது. முதல்வர் எம்.கே. ஸ்டாலின் மே 21 அன்று…