தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வன்னியம்பதி பகுதியில் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதியதாக குடியிருப்புகளை கட்டும் பணியை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இந்த வன்னியம்பதி பகுதி, மந்தைவெளி வெங்கடகிருஷ்ணா சாலை அருகே உள்ளது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் தற்போது மூன்று பிளாக்குகள் கட்ட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பிளாக் 1 – ல் 111 தொகுதிகளும், பிளாக் 2 – ல் 1, 192 தொகுதிகளும் பிளாக் 3 ல் 192 தொகுதிகளும் கட்டப்படவிருக்கிறது.
இங்கு வசித்த மக்கள் இருப்பிடத்தை காலி செய்வதற்கு முன்னர் வீடு ஒதுக்கீடு செய்வதற்கு தேவையான ஆவணங்களை குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டனர். இது தவிர இந்த பகுதியில் அனுமதியில்லாமல் இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி குடியிருந்த மக்களுக்கும் வீடுகளை வழங்கவுள்ளதாக குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…