தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வன்னியம்பதி பகுதியில் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதியதாக குடியிருப்புகளை கட்டும் பணியை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இந்த வன்னியம்பதி பகுதி, மந்தைவெளி வெங்கடகிருஷ்ணா சாலை அருகே உள்ளது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் தற்போது மூன்று பிளாக்குகள் கட்ட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பிளாக் 1 – ல் 111 தொகுதிகளும், பிளாக் 2 – ல் 1, 192 தொகுதிகளும் பிளாக் 3 ல் 192 தொகுதிகளும் கட்டப்படவிருக்கிறது.
இங்கு வசித்த மக்கள் இருப்பிடத்தை காலி செய்வதற்கு முன்னர் வீடு ஒதுக்கீடு செய்வதற்கு தேவையான ஆவணங்களை குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டனர். இது தவிர இந்த பகுதியில் அனுமதியில்லாமல் இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி குடியிருந்த மக்களுக்கும் வீடுகளை வழங்கவுள்ளதாக குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…
தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…