சென்னை மாநகராட்சி தற்போது காலனி மற்றும் குப்பம் பகுதிகளில் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தில் தடுப்பூசி போடுவதற்கு முகாம் நடத்தினர். இதில் சுமார் தொன்னூறு நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதற்கு முன் இந்த பகுதியில் உள்ள மக்கள் யாரும் அரசு ஆரம்ப சுகாதார மையம் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. தற்போது பங்குனி திருவிழா நடைபெறும் நேரத்தில் கபாலீஸ்வரர் கோவிலில் தடுப்பூசி போடுவதற்கு ஒரு சிறப்பு முகாம் அமைத்துள்ளனர். தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்கள் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள முகாமில் காலை 10 மணி முதல் 4 மணி வரை அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…